Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நியாயத்தீர்ப்பும் இயேசுவின் இரண்டாம் வருகையும்!, அக்டோபர் 11

    “நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயத்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னம் ஆகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:..” - 2 தீமோத்தேயு 4:1.Mar 567.1

    நியாயத்தீர்ப்பின் காட்சி, எல்லா உலகங்களுக்கு முன்பாகவும் நடைபெறும். இந்த நியாயத்தீர்ப்பிலே தேவனுடைய அரசாங்கத்தின் கொள்கைகள் மெய்ப்பிக்கப்பட்டு நிலைநாட்டப்படும். அவருடைய நியாயப்பிரமாணம் “பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும்” இறுதியில் நிலைநிற்கும். இவ்வொருவருடைய காரியமும் முடிவு செய்யப்பட்டு, அனைவருக்கும் தீர்ப்பு வழங்கப்படும். அப்பொழுது பாவம் கவர்ச்சியாகத் தோன்றாது; மாறாக, அதன் அனைத்து பயங்கரமான பரிமாணத்திலும் காணப்படும்.Mar 567.2

    மனுஷகுமாரன் வானத்து மேகங்கள்மேல் வருகிற காட்சியை எந்த மானிட மொழியாலும் சித்தரித்துக்காட்ட முடியாது. அவர் தமது சொந்த மகிமையோடும், தமது பிதாவின் மகிமையோடும், தமது பரிசுத்த தூதர்களின் மகிமையோடு வரவிருக்கிறார்; நித்தியகாலமுதல் அவர் அணிந்திருந்த அவருடைய ஒளியின் வஸ்திரத்தைத் அணிந்தவராக வருவார். தூதர்கள் அவரோடுகூட வருவார்கள். பதினாயிரம் பதினாயிரமான தூதர்கள் அவரது வழியிலே அவரை அழைத்து வருவார்கள். எக்காளச்சத்தம் தொனிக்கும், அது மரித்தவர்களை அவர்களுடைய கல்லறைகளிலிருந்து வெளியே அழைக்கும். கிறிஸ்துவின் சத்தம் கல்லறைகளை ஊடுருவும். மரித்தவர்களின் காதுகளைத் துளைக்கும்; கல்லறைகளிலிருக்கிற அனைவரும் உயிர்த்தெழுந்து வருவார்கள்.Mar 567.3

    “அவருக்கு முன்னதாக எல்லா ஜாதிகளும் கூட்டப்படும்.” மனிதனுக்காக மரித்த அதே நபர், கடைசிநாளிலே அவர்களை நியாயந்தீர்க்கப்போகிறார். “பிதாவானவர் நியாயத்தீர்ப்பு முழுவதையும் குமாரனிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீப்புச் செய்யும் படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.” கிறிஸ்துவைப் புறக்கணித்தவர்கள் தங்கள் பாவச் செயல்களால் துளைக்கப்பட்ட அவரைக் காணும்பொழுது, அந்த நாள் எப்படிப்பட்ட நாளாக இருக்கும்!Mar 567.4

    அவருடைய இரண்டாம் வருகையிலே, அனைத்து இதயங்களும் உணர்த்தப்படும். உலகின் அற்பமான காரியங்களுக்காகவும், சுயநலம் சார்ந்த ஆர்வங்களுடன், உலகப்பற்றோடுகூடிய மேன்மைகளிலும் நாட்டங்கொண்டு கிறிஸ்துவை விட்டுவிட்டவர்கள், அவருடைய வருகையிலே தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாம் கண்டு புலம்புவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷகனால் கூறப்பட்டவர்கள்-இவர்களே!Mar 568.1

    “அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்” என்ற சொற்றொடர், கிறிஸ்து கல்வாரியில் தொங்கும்போது, அவரைக் குத்தின மனிதரை மாத்திரம் குறிக்காது (வெளி. 1:7); மேலும் தங்களது பொல்லாத வார்த்தைகளினாலும் தவறான செயல்களினாலும் இன்றைக்குங்கூட அவரைக் குத்திக்கொண்டிருக்கிறவர்களையும் குறிக்கும்.⋆Mar 568.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 568.3

    “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” - எசேக்கியேல் 36:26.Mar 568.4