Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தொல்லைகள் நிறைந்த காலங்கள் நம்மீது வந்திருக்கின்றன!, ஜூன் 16

    “இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலானது, சமுத்திரத்தின் மேலானது, ஒரு மரத்தின்மேலானது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.” -வெளிப்படுத்தல் 7:1.Mar 333.1

    மகா வல்லமையுள்ள நான்கு தூதர்கள் பூமியின் நான்கு காற்றுகளையும் இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரமான அழிவானது முழுமையாக வராதபடி தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு கொடிய யுத்தத்திற்காக இந்தக் காற்றுகள் நாடுகளை கிளர்ந்தெழச்செய்யும் இச்சமயத்தில், நான்கு காற்றுகளையும் தூதர்கள் பிடித்துக்கொண்டு, தேவனுடய ஊழியக்காரர்கள் தங்களது நெற்றிகளிலே முத்திரையிடப்படும்வரைக்கும், சாத்தானின் பயங்கர வல்லமையின் சீற்றமானது செயலில் காட்டப்பட்டுவிடாதபடிக்கு, தடுத்து நிறுத்திவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.Mar 333.2

    தேவனுடைய தண்டனைகள் பூமியின்மீது ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்டவரின் வருகையின் நாள் அருகில் வந்துவிட்டது என்பதற்கான ஆதாரத்தைக் காலங்களின் அடையாளங்கள் காட்டுகின்றன. எதிர்காலத்திலே மிகவும் கொடிய போராட்டம் ஒன்று இருக்கிறது என்பதை நாளிதழ்களில் நிறைந்து காணப்படும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன்; துணிகரமான கொள்ளைகள் அடிக்கடி நடைபெறுகின்றன்; வேலை நிறுத்தங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன; எப்பக்கத்திலும் திருட்டும் கொலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன; பிசாசுபிடித்த மனிதர்கள், ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் ஆகியோரது உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இவையனைத்தும் ஆண்டவரின் வருகை மிகவும் சமீபம் என்று வலியுறுத்திக் கூறுகின்றன.Mar 333.3

    தடுத்துநிறுத்துகின்ற தேவ ஆவியானவர் இப்பொழுதே உலகத்தினின்று பிரிந்துசென்றுகொண்டிருக்கிறார். நிலத்திலும், சமுத்திரத்திலும், சூறாவளி, புயல், கொந்தளிப்பு, பேரழிவுகள் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வந்து தாக்குகின்றன. நம்மைச் சுற்றிலும் நிறைந்து காணப்படும் அடையாளங்கள் மனுஷகுமாரன் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார் என்ற செய்தியைச் சொல்லுகின்றன…ஆனால், இந்த உண்மையான காரணத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக் கூறப்படுகிறது. உலகத்தில் வேதனை நிறைந்த காலம் நம்மைநோக்கி வந்து கொண்டிருக்கிறது. எந்த மானிட மருந்தும் அதை சுகமாக்க முடியாது. கடைசி மாபெரும் அழிவு இந்த உலகத்தின்மீது வருமுன்னதாகவே, மனிதரின் மகத்துவத்தைப் பெருமைப்படுத்திப் பேசுகின்ற நினைவுச்சின்னங்கள் உடைந்து தரைமட்டமாகும். மாபெரும் வெளிச்சம் கிடைத்தபோதிலும், தொடர்ந்து பாவத்திலே இருந்தவர்கள்மீது தேவரின் பழிவாங்குதலின் தண்டனைகள் விழும். நெருப்பினால் பாதிக்கப்படாது என்று சொல்லப்படும் பெரும் மதிப்புள்ள கட்டிடங்கள் கட்டப்படுகின்றன; ஆனால், பழிக்குப்பழி வாங்கும் தேவ தண்டனையின் நெருப்பினால் சோதோம் அழிந்ததுபோல, இத்தகைய பெருமைக்கு எடுத்துக் காட்டாக நிற்கும் கட்டிடங்கள் சாம்பலாகும். பெரும் விலை மதிப்புள்ள கப்பல்கள் சீற்றமுள்ள அலைகளை எதிர்த்து வல்லமைமிக்க சமுத்திரத்தோடு போராடிக்கொண்டிருக்கிறதை நான் கண்டேன். அவைகளிலுள்ள தங்கம், வெள்ளி ஆகிய அனைத்துப் பொக்கிஷங்களோடும், மானிட பயணிகளோடும் அவை ஒரு தண்ணீர் கல்லறைக்குள் அமிழ்ந்தன; ஆனால், இத்தகைய பரபரப்பின் அமளிகள், ஒவ்வொரு இடத்திலுமுள்ள குழப்பம் ஆகியவைகளுக்கு மத்தியிலும், உலகத்திலே தேவனுக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று உண்டு.⋆Mar 334.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 334.2

    “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜீவாலை உன்பேரில் பற்றாது.” — ஏசாயா 43:2.Mar 334.3