Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மேலானவைகளையே நாடுங்கள்!, நவம்பர் 10

    “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.” -கொலோசெயர் 3:2.Mar 627.1

    தேவனுடைய மக்கள் இந்த உலகத்திலிருந்து, பரலோகத்தின் மேலும்,அதைச் சார்ந்த காரியங்கள்மேலும், தங்கள் கவனத்தைச் செலுத்துவார்களானால், விசேஷித்த ஜனமாக இருப்பார்கள். ஏனெனில், மனிதர்களுக்கு ஆண்டவர் காண்பித்த இரக்கம், நன்மை, பரிவு இவைகளை அவர்கள் காண்பார்கள். அவருடைய அன்பு அவர்களிடத்திலிருந்து பதிலை எதிர்பார்க்கும். அவர்களது வாழ்க்கை பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறதையும், தங்களுடைய கவனத்தை பூமியிலுள்ளவைகளின் மேலல்லாது, பரலோகத்திலுள்ளவைகள்மேல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் காண்பார்கள்.Mar 627.2

    பரலோகத்தைக்குறித்து யோசிக்கும்பொழுது, எவ்வளவு உச்சக்கட்டம்வரை நமது கற்பனாசக்தியை நாம் விரிவாக்க முடியுமோ அதற்கேற்றவாறுசெய்து, நமது திறனுக்கேற்றவாறு மிக உயர்வான சிந்தனைகளைச் சிந்திக்கவேண்டும். இந்தப் பொருளின் அகலம், ஆழம், உயரம் ஆகியவைபற்றி புரிந்துகொள்ள முயற்சிசெய்யும் பொழுது நமது இதயங்கள் சோர்வடையும். இந்த முயற்சியானது, நன்மைக்காக நமது உள்ளங்களில் ஒரு உயர்வான செல்வாக்கை ஏற்படுத்தி, நமது குணமனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தாமல், இந்தக் காரியங்களைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு முயற்சியை நாம் எடுப்பதுகூட கூடாத காரியமாகும். நம் குணமனைத்தையும் நல்லதாக மாற்றுவதற்கேதுவான முயற்சியெடுக்காத பட்சத்தில், நம் மனதை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாத பட்சத்தில், பரலோகக் காரியங்களைப் புரிந்துகொள்ள நம்மால் முயற்சிசெய்யக்கூட முடியாது. விழுந்துபோன மனிதனுக்காக கிறிஸ்து எப்படி இவ்வுலகிற்கு வந்தார் என்பதை நாம் நினைக்கும்பொழுது, நம் மீட்பிற்காக அவர் செலுத்திய கிரயத்தைக்குறித்து ஒரளவே நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் ஆண்டவருக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு உண்மையான நன்மையையும் மேன்மையும் இல்லை என்பதை நாம் நன்றாக உணர்ந்துகொள்கிறோம்.Mar 627.3

    கல்வாரி சிலுவையிலிருந்து பிரகாசிக்கும் ஒளியைக்கொண்டு மாத்திரமே, பாவத்தின்மூலமாக மானிட இனமானது எத்தகைய ஆழமான பாவத்திற்குள்ளும் இழிநிலைக்கும் விழிந்துவிட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். நம்மை மீட்கத்தக்கதாக, பரலோகத்திலிருந்து இறங்கிய சங்கிலியின் நீளத்தைக்கொண்டுமாத்திரமே, எவ்வளவு ஆழம் மூழ்கிவிட்டோம் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்; அதைப்போலவே, நாம் பார்க்கக்கூடாத உண்மைகளை எப்போழுதும் நம் மனக்கண்முன் வைத்துப்பார்த்தால் மாத்திரமே, மீட்பின் ஆச்சரியமான திட்டத்தைப்பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும்.Mar 628.1

    நாம் ஏறக்குறைய வீட்டிற்குச் சமீபமாக வந்துவிட்டோம். “உங்கள் போராட்டம் முடிவடைந்துவிட்டது. உங்கள் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்” என்கிற நம் இரட்சகருடைய எத்தகைய கீதத்தையும்விட இனிமையான சத்தத்தை நாம் வெகு சீக்கிரத்தில் கேட்போம். பாக்கியமான ஆசீர்வாதத்தை அவரது அழியாமையுள்ள உதடுகளிலிருந்து கேட்க நான் விரும்புகிறேன்; அவரைத் துதிக்க ஆசைப்படுகிறேன். சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கும் அவரை நான் மேன்மைப்படுத்த விரும்புகிறேன். பரலோக மன்றங்களின் ஊடாக எனது குரல் மீண்டும் மீண்டும் எதிரோலித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் அங்கே இருப்பீர்களா?...வரப்போகிற உலகத்தின் சந்தோஷங்களை ருசித்துப்பார்க்கிறதற்கேதுவாக, ஆண்டவர் நம்மை அனைத்து நிறைவாலும், வல்லமையாலும் நிரப்ப தேவன் நமக்கு உதவிசெய்வாராக.⋆Mar 628.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 628.3

    “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” - 1 கொரிந்தியர் 15:58.Mar 628.4