Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக எழும்பும் உலக மக்கள்!, ஜூலை 28

    “அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்த்ரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப்போயிற்று.” - வெளிப்படுத்தல் 12:17.Mar 417.1

    நமது மக்கள், அவர்களைக் கவனித்துப்பார்க்குமளவிற்கு முக்கியத்துவமற்றவர்கள் என்று கருதப்படுவார்கள்; ஆனால், ஒரு மாறுதளுண்டாகும். கிறிஸ்துவ உலகமானது இப்பொழுது சில பொது இயக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் செயல்கள் கற்பனையைக் கைக்கொள்ளும் மக்களை முக்கியத்துவம் வாய்ந்த நிலைக்குக் கொண்டுவரும்.Mar 417.2

    உலகம் முழுவதும் ஏழாம் நாள் வருகையினருக்கு விரோதமாகத் தூண்டப்பட்டு, பகைநிறைந்து காணப்படும். இந்த அந்திக்கிறிஸ்துவினுடைய வல்லமையின் அமைப்பாகிய, ஞாயிறு ஆசரிப்பு என்ற அமைப்பை மதிக்காமலும், பாப்பானவருக்குத் தலைவணங்காமலும் இருப்பதால், இவ்வாறு நடக்கும். உலகத்தில் அவனது மேலாதிக்கமானது, வாதத்திற்கு இடமின்றி நிலைத்திருக்கத்தக்கதாக அவர்களை பூமியினின்று அகற்றிப்போடுவது என்பதே சாத்தானின் நோக்கமாகும்.Mar 417.3

    நமது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சத்தியத்தில், ஒவ்வொரு நிலையும் மாபெரும் மேதாவிகளின் குற்றச்சாட்டைச் சுமக்க வேண்டியதிருக்கும். உலகின் மகா மனிதர்களில் மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள மனிதர்கள் நமது சத்தியத்தோடு தொடர்புகொள்ளத்தக்கதாகக் கொண்டுவரப்படுவார்கள்; எனவே, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிலையும் குற்றங்கண்டுபிடிக்கத்தக்கதாக, ஆய்வுசெய்யப்பட்டு, வேதவாக்கியங்களோடுவைத்து சோதிக்கப்படும்; இப்பொழுது, நம்மீது யாரும் அக்கறை காட்டாததுபோல் தோன்றும்; ஆனால், எப்பொழுதும் இப்படியே இருக்காது. நம்மை முன்னணிக்குக் கொண்டுவரத்தக்கதாக இயக்கங்கள் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. நமது சத்தியத்தின் ஆய்வுகள் வரலாற்று அறிஞர்களாலும் உலகின் மாபெரும் மனிதர்களாலும் அலசி ஆராயப்படவேண்டியதிருக்குமானால், அதுவும் அவ்வாறே நடைபெறும்.Mar 417.4

    சத்தியம் என்றால் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக, நமக்கு நாமே அறிந்திருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்கான காரணத்தைப் பெருமையோடும் தற்புகழ்ச்சியோடும் சுயத்திருப்தியோடுமல்ல, பயத்தோடும் சாந்தத்தோடும் கிறிஸ்துவின் ஆவியோடும் கூற வேண்டும். நமது விசுவாசத்திற்கான விடையை நாம் தனியே நின்று கொடுக்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.Mar 418.1

    ஒவ்வொரு காரியத்திலும் நாம் தாக்கப்படுவோம்; நாம் உச்சகட்ட நிலைவரை சோதிக்கப்படுவோம்; இந்தச் சத்தியமானது நமது தந்தையர்கள்மூலம் நமது கரங்களில் கொடுக்கப்பட்டது என்ற காரணத்தினால் மாத்திரம் நாம் இந்த விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்று விரும்பமாட்டோம். நமக்கு முன்னாலிருக்கும் பயங்கரமான சோதனையை இத்தகைய விசுவாசத்தால் தாங்கி நிற்கமுடியாது; நாம் ஏன் ஏழாம் நாள் வருகையினரது சபையில் அங்கம் வகிக்கிறோம்? உலகினின்று பிரிந்து, ஒரு தனிப்பட்ட மக்கள் கூட்டமாக, நாம் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இப்படிப்பட்ட வினாக்களுக்கு விடையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இருளின் வல்லமைகள் தங்களது பீரங்கிகளால் நம்மீது தாக்குதல் நடத்தும். அக்கறையற்று கவலையற்றவர்களாக இருப்பவர்கள் தங்களது பூமியின் பொக்கிஷங்கள்மீது தங்களது பாசத்தை நிலைநாட்டி வைத்திருப்பார்கள். தேவன் நாம் மக்களிடையே எப்படிக் காரியங்களை நடப்பிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அக்கறைகொள்ளாதவர்கள் எளிதில் இரையாகிவிடுவார்கள். இயேசு கிறிஸ்துவில் காணப்படுவது போன்ற சக்தியைப்பற்றிய ஓர் அறிவே நம்மை எப்பொழுதும் திடமானவர்களாக வைத்திருக்கும்; வேறு எதுவுமல்ல. இதை வைத்துக்கொண்டு ஓராயிரம் அல்லது ஈராயிரம் பேரை விரட்டியடிக்கலாம்; பத்தாயிரம் பேரை பறக்கடிகலாம்.⋆Mar 418.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 418.3

    “அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சாந்தமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம்பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.” - ஏசாயா 61:9.Mar 418.4