Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அவர் சதாகாலமும் அரசாளுவார்!, ஜனவரி 13

    ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; “அப்பொழுது உலகத்தின் இராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய இராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் இராஜ்யபாரம் பண்ணுவார்” என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. - வெளிப்படுத்தல் 11:15Mar 25.1

    நீதியின் ஆளுகைக்கு இட்டுச் செல்லும் கிறிஸ்துவின் வருகையானது சிறப்புமிகுந்த.. பரிசுத்த எழுத்தாளர்களின் கூற்றுகளை, அருள் நிறைவால் தூண்டி எழுப்பியிருக்கிறது.. இஸ்ரவேல் இராஜாவின் இராஜரிகத்தையும் வல்லமையையும்பற்றி சங்கீதக்காரன் பின்வருமாறு பாடினான்:....“வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,...கர்த்தருக்கு முன்பாக... அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. நாடும் அதிலுள்ள யாவும் களிகூறுவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.” - சங்கீதம் 96:11-13.Mar 25.2

    தீர்க்கதரிசியாகிய ஏசாயா..“அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தனது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்” (ஏசாயா 25:8) என்று கூறினார்..Mar 25.3

    மீட்பர் தமது சீடர்களைவிட்டுப் பிரிந்துசெல்லவிருந்த வேளையிலே அவர், தாம் மீண்டும் வருவார் என்ற நிச்சயத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களது தூக்கத்திலே அவர்களைத் தேற்றினார். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;...என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறன். நான் பொய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு,.... நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” - யோவான் 14:1-3.Mar 25.4

    கிறிஸ்து பரமேறியபின், ஒலிவமலையின்மீது தாமதித்து நின்று கொண்டிருந்த தூதர்கள், அவர் மீண்டும் வருவார் என்று வாக்குத்தத்தை பின்வரும் வார்த்தைகளில் திரும்பவும் சீடர்களுக்குக் கூறினார்கள்: “.....உங்களிடத்தினின்று வானத்துக் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” - அப்போஸ்தலர் 1:11. ஆவியின் ஏவுதலினால் அப்போஸ்தலனாகிய பவுல்: “கர்த்தர் தாமே ஆராவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்” (1 தெசலோனிக்கேயர் 4:16) என்று வலியுறுத்திக் கூறுகிறார். “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்,” (வெளிப்படுத்தல் 1:7) என்று பத்மு தீவின் தீர்க்கதரிசி கூறுகிறார்.Mar 26.1

    “உலகத் தோற்றுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகலெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித்தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்...” (அப்போஸ்தலர் 3:21) என்று கூறுவதைப்பற்றிய காரியங்களின் மகிமைகள் அவரது வருகையைப்பற்றியே சூழ்ந்து நிற்கின்றன; அப்பொழுது, தீமையின் நீண்டகால ஆட்சி நொறுக்கப்படும். “அப்பொழுது உலகத்தின் இராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய இராஜ்யங்களாயின” - வெளிப்படுத்தல் 11:15.⋆Mar 26.2

    வாக்குத்தத்தல் வசனம்: Mar 26.3

    “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உள் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” - சங்கீதம் 37:4.Mar 26.4