Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆண்டவர் கொடுக்கும் வெகுமதி அவரது கரத்திலிருக்கிறது!, அக்டோபர் 31

    “இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.” - வெளிப்படுத்தல் 22:12.Mar 607.1

    இந்த உலகத்தில் நம்முடைய வேலை சீக்கிரத்தில் முடிவடைய இருக்கிறது. அவரவருடைய வேலைக்குத்தக்கதாக அவரவர் பலனைப் பெற்றுக்கொள்ளுவார்கள். பரிசுத்தவாங்களுக்குக் கொடுக்கப்படும் நித்திய சுதந்திரம் எனக்குக் காட்டப்பட்டது. சத்தியத்திற்க்காக மிக அதிகமான பாடுகளைச் சகித்தவர்கள், தாங்கள் மிகவும் அதிகமாய் பாடுபட்டதாக நினைக்கமாட்டார்கள்; மாறாக பரலோகத்தை வெகு சுலபமாகப் பெற்றுக்கொண்டோம் என்றே எண்ணுவார்கள்.Mar 607.2

    நிறைவேற்றப்படாத கடமைகள், ஒதுக்கித்தள்ளின-சுயனலமான-ஏமாற்றின-வஞ்சுத்துப்போட்ட-மிதமிஞ்சின எல்லா விஷயங்களைக் குறித்த ஒவ்வொரு நாளின் கணக்கும் பரலோகத்திலிருக்கிறது. இறுதி நியாயத்தீர்ப்புக்காக எத்தனை தீயசெயல்கள் சேர்ந்து குவிந்துகொண்டிருக்கின்றன. கிறிஸ்து வரும்பொழுது, “அவனுடைய கிரியைக்குத்தக்கதான பலன்” அவரோடுகூட வரும். அது எப்படிப்பட்ட வெளிப்பாடாக இருக்கும்! சரித்திரத்தின் பக்கங்கள், அவர்களுடைய வாழ்க்கையை வெளிப்படுத்தும்பொழுது, ஒரு சிலருடைய முகங்கள் எத்தனை குழப்பமடையும்.Mar 607.3

    செய்யப்படுகிற நன்மை-தீமையான செயல்கள், அதின்மூலம் பாதிக்கப்பட்டவர்கள், இவைகளைப்பற்றின அனைத்தையும் இதயங்களை ஆராய்கிறவர் அறிந்து வெளிக்கொண்டுவருகிறார். ஏனெனில், அவருக்கு அனைத்து இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செயலை தூண்டிய நோக்கங்களுக்கு ஏற்றவாறு வெகுமதி அளிக்கப்படும்.Mar 607.4

    கிறிஸ்துவின் வருகை அதிசீக்கிரம், அது வேகமாக சமீபித்துக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்யக் கொஞ்ச காலமே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் அழிந்துகொண்டிருக்கிறார்கள்...Mar 608.1

    அழிந்துகொண்டிருக்கிற உலகத்தின் தேவைகளை நாம் புரிந்துகொள்வதற்கேதுவாக, ஆண்டவருடைய மாற்றும் வல்லமை நம்மை ஆட்கொள்ளவேண்டியது நமக்கு அவசியம். நான் பாரத்தோடு உங்களுக்கு அனுப்பும் செய்தியெல்லாம், “ஆயத்தமாகுங்கள், ஆயத்தமாகுங்கள், ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள்” என்பதே. உங்கள் விளக்குகளிலுள்ள திரிகளை வெட்டிச் சரிப்படுத்துங்கள்; சத்திய ஒளி எல்லா ஒதுக்குத் தெருக்களிலும் புதர்வேலியோரங்களிலும் ஒளிரட்டும். எல்லாவற்றிற்குமான முடிவின் சமீபத்தைக்குறித்து உலகம் எச்சரிக்கப்படவேண்டும்.Mar 608.2

    ஒரு புதிய மனமாற்றம் நாம் நாடுவோம். நம்முடைய இதயம் மென்மையாக மாறவும், முரட்டுத்தனமான ஆவியோடு வேலை செய்யாதபடிக்கும், நாம் மனம்மாறவுந்தக்கதாக பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் இதயத்தை முழுமையாக ஆட்கொள்ளவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆலோசனைக்காக ஆண்டவரை எதிர்பார்த்திருக்கிற தேவனுடைய பிள்ளைகளைப்போலவும் நாம் நடக்கவேண்டும். எங்கு சத்தியம் கொடுக்கப்பட்டாலும் அவரது திட்டங்களை செயல்படுத்த ஆயத்தமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தால் தேவன் மகிமைப்படுவார்; அப்பொழுது, நம்முடைய பக்தி வைராக்கியத்தைப் பார்க்கிற மற்றவர்கள் “ஆமென், ஆமென்” என்று சொல்வார்கள்.⋆Mar 608.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 608.4

    “அப்படிச்செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைபெறுவீர்கள்.” - 1 பேதுரு 5:4.Mar 608.5