Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உயிர்த்தெழுதலைப்பற்றிய இரகசியங்கள்!, அக்டோபர் 20

    “என் மீட்ப்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்ப்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்திலிருந்த் தேவனைப்பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அன்னிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக்காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.” - யோபு 19:25-27.Mar 585.1

    கல்லறைக்குள் போன அதே உயிரணுக்கள் இல்லாத போதிலும், உயிர்த்தெழுதலிலே நமது தனித்தன்மை காப்பாற்றப்படும். ஆண்டவருடைய ஆச்சரியமான கிரியைகள் மனிதனுக்கு இரகசியமாகவே இருக்கின்றன. ஆவி, அதாவதுமனிதரின் குணம் பாதுகாக்கப்படும்படி தேவனிடத்திற்குச் சொல்லுகிறது. உயிர்த்தெழுதலிலே ஒவ்வொரு மனிதனும், அவனது சொந்த குணங்களைப் பெற்றுக்கொள்வான். ஆண்டவர் தாம் நியமித்த காலத்திலே, மரித்தோரை அழைக்கும்போது, அவர்களுக்கு மீண்டும் ஜீவ சுவாசத்தைத் தருவார். உலர்ந்த எலும்புகளை உயிரடையச்செய்வார். அதே தோற்றம் எழுந்து வரும்; ஆனால், வியாதியோ, ஊனமோ அவர்களிடம் இருக்காது. நண்பர்கள், நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வதற்க்கு ஏதுவாக அதே உருவங்களை அவர்கள் சரீரம் பெற்றிருக்கும். மரணத்திற்க்கு முன்னிருந்த அதே அழிந்துபோவதற்கேதுவான அணுக்களை சரீரத்திலே ஆண்டவர் கொடுப்பார் என்ற நியதி இல்லை. அவரை மகிமைப்படுத்துகிற, அவருக்குப் பிரியமான சரீரத்தையே மரித்த நீதிமான்களுக்கு அவர் வழங்குவார்.Mar 585.2

    நிலத்திலே விதைக்கப்பட்ட விதையை ஒப்புமைப்படுத்து பவுலார் இந்தப் பொருளை விளக்குகிறார். விதைக்கப்பட்ட விதை அழிந்துபோகிறது. ஒரு புதிய முளை முளைத்து வெளியே வருகிறது. மக்கிப்போன விதையிலிருந்த அதே உயிரணுக்கள் மீண்டும் பழைய விதையாக மாறப்போவதில்லை. மாறாக, அதற்குரிய மேனியை தேவன் தமது விருப்பத்தின்படி அதற்குக் கொடுக்கிறார்; மேலும், முகச் சிறப்பான மூலப்பொருளால் மனிதன் புதுப்பிக்கப்படுவான்; ஏனெனில், அது ஒரு புதிய படைப்பு; அது ஒரு புதிய பிறப்பு; இயற்கையான சரீரம் விதைக்கப்பட்டு, அது ஒரு ஆவிக்குரிய சரீரமாக எழுப்பப்படுகிறது.Mar 585.3

    விசுவாசி, கிறிஸ்து மரித்ததைப்போல, மரிக்கலாம்; ஆனால், இரட்சகரின் ஜீவன் அவனுக்குள் இருக்கிறது. அவனுடைய ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் நான் வந்தேன் என்று இயேசு சொன்னார். விசுவாசிகள் இந்த வாழ்க்கையிலே அவரோடுகூட ஒன்றாகவும், நித்தியம் முழுவதிலும் அவரோடு இனைந்திருப்பதற்கும், தேவையான முறைமைகளை அவர் கொண்டிருக்கிறார்...Mar 586.1

    கடைசிநாளிலே, அவருடைய சரீரத்தின் ஒரு பகுதியாக அவர்களை அவர் எழுப்புவார். நாம் அவருடைய தெய்வீகத்தில் இணையும்படிக்கு, கிறிஸ்து நம்மில் ஒருவரானார்.⋆Mar 586.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 586.3

    “எனக்கு செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” - நீதிமொழிகள் 1:33.Mar 586.4