Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒத்திசைவான ஏமாற்றங்கள்!, ஜனவரி 8

    “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; ...கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” - யாக்கோபு 5:11.Mar 15.1

    மானிடரின் கருத்துகள், பொய்யான உபதேசங்கள், பாரம்பரியங்கள் ஆகியவைகளால் மக்களது உள்ளங்கள், ஏன் தேவனுடைய ஊழியக்காரர்களுடைய உள்ளங்களுங்கூட, அடிக்கடி குருட்டுத்தனத்தை அடைந்துவிடுகின்றன; எனவே, தேவன் தமது வசனங்களின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் மாபெரும் காரியங்களை அவர்களால் அரைகுறையாகமட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. இந்த பூமியில், இயேசு தமது சீடர்களோடு இருந்து காலத்திலுங்கூட, சீடர்களின் நிலை இப்படி தான் இருந்தது. மேசியா உலகியல் சார்ந்த ஒரு அரசனாக வருவார் என்றும், மேலும் அவர் அகில உலக இராஜ்யத்தின் சிங்காசனத்திற்கு இஸ்ரவேலை உயர்த்துவார் என்றும், மக்கள் கொண்டிருந்த பொதுவான-பிரபலமான கருத்துகளில் அவர்களது உள்ளங்கள் ஊறிக்கிடந்தன; எனவே, தமது பாடு, மரணம்பற்றி முன்னர் உரைத்த வார்த்தைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...Mar 15.2

    பிறந்ததிலிருந்து அவர்களது இதயங்கள் வரப்போகும் அந்த பூலோக இராஜ்யத்தின் மகிமைமாற்றிய காரியங்களிலேயே நிலைத்திருந்தன; இக்காரியமானது, அவர்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மழுக்கி, மங்கலாக்கிவிட்டது...Mar 15.3

    இயேசுவின் முதலாம் வருகையின்போது, “இராஜ்யத்தின் சுவிசேஷத்தை” பிரசங்கித்த சீடர்களின் அனுபவத்தைப் போலவே, இரண்டாம் வருகையிலே, அவரது தூதை அறிவித்தவர்களுடைய அனுபவமும் அதற்க்குச் சரிநிகராக இருந்தது...Mar 15.4

    முதல் பன்னிரண்டு (இயேசுவின்) சீடர்களைப்போலவே, வில்லியம் மில்லரும் அவருடைய தோழர்களும் தாங்கள் பிரசங்கித்துவந்த செய்தியின் உட்பொருளைத் தாங்களே முழுமையாக விளங்கிக்கொள்ளவில்லை. தீர்க்கதரிசனத்தின் ஒரு முக்கியமான கருத்தின் சரியான விளக்கத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளாதபடி, ஏற்கனவே நீண்டகாலமாக சபையில் நிலைநாட்டப்பட்டிருந்த தவறுகள் தடுத்துப்போட்டன. உலகத்திற்குக் கொடுக்கும்படியாக, தேவன் அவர்களிடத்தில் ஒப்படைத்திருந்த தூதை, அவர்கள் கூறி அறிவித்தபோதிலும், அந்த தீர்க்கதரிசனத்தின் பொருளை தவறாகப் புரிந்துகொண்டதால், அவர்கள் துன்பமடையத்தக்கதான ஏமாற்றத்தைச் சந்திக்கவேண்டியதாயிற்று...Mar 15.5

    இயேசுவின் முதல் சீடர்களுக்கு நடைபெற்றதுபோலவே, இந்த விசுவாசிகளுக்கும் அவர்கள் துன்பமடைந்த அந்த மணிவேளையில் புரிந்துகொள்ளமுடியாதபடி-இருண்டுகிடந்ததைப்போன்று தோற்றமளித்த காரியங்கள், பின்பு தெளிவாக்கப்படும். “ஆண்டவரது முடிவை” அவர்கள் கண்டபோது, தாங்கள் செய்த தவறுகளின் விளைவாக துன்பங்கள் வந்தபோதிலும், அவர்கள்பால் அவர் கொண்டிருந்த அன்பின் நோக்கங்கள் உறுதியான நிறைவேறுதலை அடைந்தன என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் “மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிராரென்றும்” (யாக்கோபு 5:11) மேலும், “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்” (சங்கீதம் 25:10) என்பதையும் அவர்கள் ஒரு பாக்கியமான அனுபவத்தின் மூலமாகக் கற்றுக்கொள்வார்கள்.⋆Mar 16.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 16.2

    “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;” உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” - ஏசாயா 54:13.Mar 16.3