Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஜூலை

    விழுந்துபோன சபைகளின் முக்கூட்டு ஐக்கியம்!, ஜூலை 1

    “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள இராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.” - வெளிப்படுத்தல் 16:13,14.Mar 363.1

    பாப்பானவரின் அமைப்பாகிய ஞாயிறு ஆசரிப்பை, தேவ பிரமாணத்தைமீறி, சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்துவதின்மூலமாக, நமது நாடு (U.S.A.) நீதியினின்று தன்னை துண்டித்துக்கொள்ளும். புரொட்டஸ்டாண்டு மார்க்கமானது, ரோம வல்லமையின் கரத்தைப் பற்றிப்பிடிக்கத்தக்கதாக, அந்தப் படுகுழிக்கு அப்பாலும் கரங்களை நீட்டுவார்கள். இந்த முக்கூட்டு ஐக்கியத்தின் செல்வாக்கிற்கடியில், புரொட்டஸ்டாண்டு குடியரசு நாட்டின் ஒவ்வொரு கொள்கையையும், நமது நாடு (U.S.A.) மறுத்தப்போடும்பொழுது, பாப்பானவரின் பொய் உபதேசங்களையும் வஞ்சகங்களையும் பரப்புவதற்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்போது, அப்பொழுது சாத்தான் தனது அற்புதஞ்செய்யும் கிரியைகளை நடப்பிக்கும் நேரமும் உலகத்தின் முடிவின் நேரமும் நெருங்கிவிட்டது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம்.Mar 363.2

    ஆத்துமா அழியாதது, ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தமானது என்ற மாபெரும் பிழைகள்மூலமாக, சாத்தான் அனைத்து மக்களையும் தனது வஞ்சகங்களுக்கடியில் கொண்டுவருவான். ஆத்துமா அழியாதது என்ற கொள்கை ஆவிமார்க்கத்திற்கு வழிநடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தமானது என்ற கொள்கை ரோமாபுரி யோடு ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாவது பிழையானது, ரோமாபுரியோடு உணர்ச்சி ஒருமைப்பாட்டின் ஒரு உறவை உருவாக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள புரொட்டஸ்டாண்ட்டுகள் ஆவிமார்க்கத்தின் கரத்தைப் பற்றிப் பிடிக்கத்தக்கதாக, பெரும் பிளவிற்குக் குறுக்கே தங்களது கரங்களை நீட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். ரோமாபுரியின் வல்லமையின் கரங்களைப் பற்றிப்பிடிப்பதற்காக, அந்தப் படுகுழிக்கு அப்பாலும் கரத்தை நீட்டி எட்டிப்பிடிப்பார்கள். இத்தகைய முக்கூட்டு அணியின் செல்வாக்கிற்கடியில் மனச்சாட்சியின் உரிமையை மிதித்துப்போடுவதிலே, ரோமாபுரியின் அடிச்சுவட்டை இந்த நாடு (U.S.A.) பின்பற்றும்.Mar 363.3

    பாப்புமார்க்கத்தாரும், புரொட்டஸ்டாண்டுகளும், உலகப் பிரகாரமாக வாழும் மக்களும் தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து, அதின் பலனை மறுதலிக்கிறவர்களாக இருப்பார்கள். உலகத்தையே மனமாறுதலுக்குக் கொண்டுவரத்தக்கதான இந்த மாபெரும் ஐக்கியக் கூட்டுறவிலே, ஒரு மிகப் பெரிய இயக்கத்தையும் நீண்ட காலமாக அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த ஆயிரவருட அரசாட்சியையும் இந்த இயக்கம் கொண்டுவரும் என்று எண்ணுவார்கள்.Mar 364.1

    நமது நாடானது (U.S.A), ஞாயிறு சட்டத்தை இயற்றுவதற்காக, தனது அரசாங்கத்தின் கொள்கைகளை ஒழித்துப்போடும்போது, இந்தச் செயலிலே புரொட்டஸ்டாண்டு மார்க்கமானது, பாப்பு மார்க்கத்தோடு கரங்களை இணைத்துக்கொள்ளும். நீண்டக்காலமாக சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த கொடுமைக்கு, இக்காரியமானது உயிர்க்கொடுத்து, மீண்டும் விறுவிப்பான செயலுடன் கொடுங்கோன்மையை கிளர்ந்தெழச்செய்யும்.⋆Mar 364.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 364.3

    “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சைரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி…” - உபாகமம் 11:13, 14.Mar 364.4