Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவைப்போன்று சாத்தான் தோற்றமளித்தல் — 2, ஜூலை 17

    “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” — 2 கொரிந்தியர் 11:14.Mar 395.1

    தேவனுடைய மக்களுக்கு எதிராக, தான் நடத்தப்போகும் கடைசிப் போராட்டத்திலே சாத்தான் மக்களை ஏமாற்றத்தக்கதான வேலைகளைச்செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். அவன் தான் செய்கிறானென்பதை அவர்கள் அறியாமல் இருக்கத்தக்கதாக, இவ்வாறு செய்கிறான். ” இதைக்குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துத்கொள்வானே”.. தேவனுடைய மக்களை பழித்துறைக்கவும் சோதிக்கவும் தவறாக வழிநடத்தவும் சாத்தான் தன் வல்லமை முழுவதையும் பயன்படுத்துவான்.Mar 395.2

    நமது ஆண்டவரை சாத்தான் நேருக்குநேர் முகம்நோக்கிப் பார்க்கவும் சோதிக்கவும் இழித்துரைக்கவும் துணிகரங்கொண்டவனாக இருந்தான். அவன் அவரைத் தனது புயங்களினால் தூக்கி, தேவாலயத்தில் உப்பரிகைக்குச் சுமந்துசெல்லவும் வல்லமை உடையவனாக இருந்தான். மேலும் மிகவும் உயர்ந்த மலைக்கும் அவரைத் தூக்கிச்சென்றான். அவன் தங்களது ஆண்டவரைவிடமிகக் குறைந்த ஞானமுள்ள, அவனது சூழ்ச்சி மற்றும் வல்லமை பற்றி முற்றிலும் அறியாத நிலையிலிருக்கின்ற, இந்தக் காலத்திலுள்ள மானிடத் தலைமுறையின்மீது, மிகவும் அதிசயிக்கத்தக்க அளவிற்கு தனது வல்லமையை பயன்படுத்துவான்.Mar 395.3

    ஆச்சரியமான விதத்தில், இயல்பிலேயே அவனது கட்டளையின்படி காரியங்களைச் செய்பவர்களது உடல்கள் பதிக்கப்படும்படிச்செய்வான்.Mar 395.4

    இயேசு கிறிஸ்துவைப்போன்ற உறுவ அமைப்பில் வந்து, பெரிய அற்புதங்களைச் செய்வான். மனிதர் இயேசு கிறிஸ்துதான் என்றெண்ணி, அவன் காலில் விழுந்து பணிந்துகொள்வார்கள்.Mar 395.5

    உலகம் கிறிஸ்துவென்று மகிமைப்படுத்துகின்ற இந்த ஜீவியை (சாத்தான்), நாம் வணங்கவேண்டுமென்று கட்டளையிடப்படுவோம். நாம் என்ன செய்வோம்? இவன் மனிதனின் மிகப் பெரிய சத்துரு என்றும், எனினும் இவன் தன்னை தேவன் என்று உரிமை கோருகிறான் என்றும், இப்படிப்பட்ட எதிராளிக்கு விரோதமாக கிறிஸ்து எங்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருக்கிறார் என்றும், அவர்களுக்குச் சொல்லுங்கள்; மேலும். கிறிஸ்து இரண்டாம் முறையாகத் தோன்றும்பொழுது, அவரது வருகை மகா வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் இருக்குமென்றும், ஆயிரமாயிரமான பதினாயிரம் பதினாயிரமான தூதர்களோடு அவர் வருவார் என்றும், அவர் வரும் பொழுது, அவரது குரலை நாங்கள் அறிவோமென்றும் அவர்களிடத்தில் கூறுங்கள்.Mar 396.1

    தான் கிறிஸ்துவென்று உரிமை கோரிக்கொண்டு, தனியாக உங்கள் கண்ணுக்குமுன் அற்புதங்களைச் செய்வான். தேவனுடைய சத்தியத்தின்மீது உங்களது பாதங்கள் திடமாக நிலைநிறுத்தப்பட்டிருக்காவிட்டால், உங்களது அடித்தளத்தினின்று இழுத்துச்செல்லப்படுவீர்கள்,Mar 396.2

    சாத்தான் முடிவுபரியந்தம் யத்தத்தை நடத்தத் தீர்மானித்திருக்கிறான். தான் கிறிஸ்துவென்று உரிமை கோரியவனாக- ஒளியின் தூதனின் வேடத்தைத் தரித்தவனாக வந்து, உலகத்தை வஞ்சித்துப் போடுவான். அவனது வெற்றி மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுந்தான் கொள்கைகளிலே உறுதியாக ஊன்றப்பட்டிருக்கின்றனவோ, அவர்களை எந்தப் புயலினாலும் அல்லது சூறாவளியினாலும் அசைக்க முடியாது; ஏறக்குறைய உலகமனைத்தும் மருளவிழுந்துகிடக்கும் பொழுது, இவர்கள் உறுதியாக நிற்பதற்கும் பெலனுடையவர்களாக இருப்பார்கள்.⋆Mar 396.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 396.4

    “.. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” - யாக்கோபு 4:7.Mar 396.5