Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தீர்க்கதரிசனத்தில் அமரிக்க ஐக்கிய நாடு! (U.S.A), ஜூலை 4

    “பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்தது, வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது.” - வெளிப்படுத்தல் 13:11Mar 369.1

    மேற்கூறப்பட்ட தீர்க்க தரிசனத்தின் படி ஒரே நாடு, அந்த ஒரேயொரு நாடுதான், அதற்கேற்ற தனிக்குறிப்புள்ள விவர விளக்கத்திற்கு பொருத்தமானதாக அமந்திருக்கிறது. அதைக் குறித்து- தவறாகப் பொருள்கொள்ளமுடியாத அளவிற்கு, அது அமரிக்க ஐக்கிய நாட்டையே சுட்டிக்காட்டுகிறது (U.S.A)Mar 369.2

    நமது சொந்த நாட்டின் (U.S.A) எழுச்சி, அதன் வளர்ச்சி ஆகியவைகுறித்து கருத்தைக் கவருகின்ற விதத்தில் அதின் தோற்றம் காணப்படுகிறது. நமது அரசாங்கத்தின் (U.S.A) தன்மை அல்லது தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பிலே குடியரசு கொள்கை, புரொட்டஸ்டாண்டு கொள்கை ஆகிய இரண்டு அடிப்படையான கொள்கைகளும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய மதிப்பு வாய்ந்த பண்பையும், மாசற்ற தன்மையையும் சுட்டிக்காட்டதக்கதாக, ஆட்டுக்குட்டிக்கு இருப்பதைப் போன்ற கொம்புகள் அடையாளச்சின்ன்ங்களாக இருக்கின்றன.Mar 369.3

    இந்த உலகிலே, சூரியன் உதிக்கின்ற அனைத்து தேசங்களுக்கும் ஆண்டவர் செய்திருப்பதை விட அதிகமாக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் (U.S.A) செய்திருக்கின்றார். தங்களது மனச்சாட்சியின் கட்டளைக்கேற்றபடி அவர்கள் தொழுகை செய்வதற்காக, அவர் தமது மக்களுக்காக ஒரு புகலிடத்தைக் கொடுத்தார். இங்கு கிறிஸ்தவ மதமானது அதின் தூய்மையிலே முன்னேற்றமடைந்தது. மனிதனுக்கும் தேவனுக்குமிடையே மத்தியஸ்தராக இருக்கின்ற, ஜீவனை அளிக்கும் கொள்கையானது, கட்டுப்பாடின்றி தாராளமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. மனசாட்சியின் கட்டளைகளுக்கேற்றபடி அனைத்து மக்களும் தம்மைத் தாராள மாகத் தொழுதுகொள்ள வேண்டுமென்று தேவன் திட்டமிட்டு வைத்தார். விரிவாக்கப்பட்ட — சுவிசேஷச் சிறப்புரிமைக்காக விடுதலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட, இந்த உள்நாட்டு அரசாங்க நிறுவனங்களை திட்டமிட்டு அமைத்தார்.Mar 369.4

    ஆனால் நீதிக்கெல்லாம் பகைஞனாகிய சாத்தான், இந்த நாட்டிற்காக (U.S.A) தேவன் வைத்திருக்கும் நோக்கத்தின் மீது அவனது திட்டங்களை வைத்திருக்கிறான். தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை மனிதன் மறந்துவிட்டதக்கதாக, வழி நடத்துகிறதுக்கு இடர் நிறைந்த முயற்சிகளைக் கொண்டுவருவான். விக்கிரக வணக்கம்போன்ற உலகப்பற்றும் பேராசையும் மாபெரும் வஞ்சகனின் கிரியைகள் மூலமாக மேலோங்கி நிற்கும். தேவனுடைய பிரமாணங்களும் அதைச் சார்ந்த அனைத்தும் வெறுமயாக்கப்படும்வரை இவ்வாறு நடக்கும்.Mar 370.1

    சாத்தான் நமக்குத் தெரியாமலேயே, நம்மை முந்திக்கொண்டிருக்கிறான் என்பது எனக்குக் காட்டப்பட்டிருந்தது. தேவனின் பிரமாணமானது, சாத்தானின் பிரதி நிதிகளால் ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கப்பட்டுவிடும். வீண் பெருமையுடன் சுதந்திரம் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருந்த நமது நாட்டில் (U.S.A) மார்க்க சுதந்திரம் ஒரு முடிவிற்கு வந்து விடும்.Mar 370.2

    நமது நாடு (U.S.A) தன்னுடைய சட்டசபைக் கூட்டங்களிலே, மனிதரின் மார்க்க சம்பந்தமான உரிமைகளிலே, அவர்களது மனசாட்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டங்கள் இயற்றும்பொழுது, ஏழாம் நாள் ஓய்வு நாளை ஆசர்ப்பவர்களுக்கு எதிராக, ஒடுக்கும் வல்லமையை செயல்படுத்தும்பொழுது, தேவனுடய பிரமாணமானது, அதின் அனைத்து உட்கருத்துக்களிலும் நோக்கங்களிலும் நமது நாட்டிலே (U.S.A) பயனற்றதாக ஆக்கப்படும். நாடுதழுவிய மருள விழுகைக்குப் பின்னர், நாட்டின் அழிவு பின் தொடர்ந்து வரும்.⋆Mar 370.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 370.4

    “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” - ஏசாயா 40:31.Mar 370.5