Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாதுகாப்பிற்காக தேவன் கொடுக்கும் வாக்குறுதி! , மார்ச் 29

    “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்கார்ரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” - 2 பேதுரு 2:9.Mar 175.1

    நமக்கு முன்பாக இருக்கிற இக்கட்டுக்காலத்திலே, தேவனுடைய பொறுமையின் வார்த்தையைக் காத்துக்கொண்ட அனைவர் மேலும், தேவன் கொடுக்கும் பாதுகாப்பின் சின்னம் வைக்கப் படும். ...தேவனுடய பிரமாணத்தை மீறுகிறவர்களுக்கு மேகஸ்தம்பமானது உக்கிர கோபத்தையும் பயங்கரத்தையுமே எடுத்துக்கூறும்; ஆனால், அவரது கற்பனையை கைக்கொண்டவர்களுக்கோ அது ஒளியும் இரக்கமும் விடுதலையுமாக இருக்கும். ‘கலகக்குணம் உடையவர்களை அடிக்கின்ற அதே பலத்த புயும், உத்தம குணம் உள்ளவர்களை விடுதலை செய்யத்தக்க வல்லமையுள்ள புயமாக இருக்கும்.’ அனைத்து உத்தமமான நபர்களும் நிச்சயமாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.Mar 175.2

    உலக வரலாற்றின் இறுதிக் காட்சிகளிலே நீங்கள் என்ன பகுதியை ஏற்றுச் செயல்புரியப்போகின்றீர்கள்... பரலோகத்திலும், பூலோகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருப்பது உங்களுக்கு தெளிவாகப் புரிகின்றதா?... உலகின் ஒவ்வொரு துன்பத்திற்கும் ஊற்றாக இருக்கும் எந்தப் பாவத்தோடும் இப்பொழுது ஒருவரும் இரகசியமான தொடர்புவைத்துக்கொள்ள வேண்டாம்...உங்களது ஆத்துமாவின் முடிவானது, நிச்சயமற்ற ஒன்றின்மீது தொங்கிக்கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் முற்றிலும் ஆண்டவரின் பக்கத்தில் இருப்பதை அறியுங்கள். உத்தமமான இதயங்களினின்றும், நடுங்கும் உதடுகளினின்றும் “யார் நிலைநிற்கக்கூடும்” என்ற கேள்வி வெளிவரட்டும். தவணையின் காலத்தில், அருமையான இந்தக் கடைசி மணிவேளையில், உங்கள் குணம் என்னும் கட்டிடத்தில் மிகச்சிறந்த மூலப்பொருட்களை வைத்து, கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு கறையினின்றும் உங்கள் ஆத்துமாக்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? வெளிச்சத்தின்படி நடக்கிறீர்களா? நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கு இசைவாக உங்களது செயல்கள் இருக்கின்றனவா?Mar 175.3

    தேவனுடைய கிருபையின் மென்மைப்படுத்துகின்ற, அடக்கி ஆளுகின்ற செல்வாக்கு உங்களில் செயல்புரிந்துகொண்டிருக்கிறதா?... தங்களது பாவங்களிலே அழிந்துகொண்டிருக்கிற மக்களுக்கு உங்களது ஒளியை பரவச்செய்து, வெளிச்சமடையச் செய்கிறீர்களா? பிராமணங்களை தங்களது கால்களின்கீழ்போட்டு மிதித்துக்கொண்டிருப்பவர்களுக்கு முன்பாக, அந்த பிரமாணங்களின் பாதுகாப்பிற்காக, ஆதரவுகொடுப்பதற்காக, உறுதியாக நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிகின்றதா?Mar 176.1

    ஓரளவிற்கு முறைப்படியான ஓர் விசுவாசியாக இருந்து கொண்டே, நித்தியஜீவனை இழந்துபோகத்தக்கதான குறையுடையவர்களாக இருப்பது சாத்தியமே. வேதாகமத்தின் சில கட்டளைகளின்படி நடந்து, கிறிஸ்தவர்களாக மதிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவ குணத்திற்கு அவசியமான தகுதிகள் குறைவாகக் காணப்பட்ட காரணத்தால், அழிவைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுவது சாத்தியமே… இரக்கம் இன்னும் தாமதித்து நிற்கும்பொழுது, நமக்காக மீட்பர் பரிந்துபேசிக்கொண்டிருக்கும்பொழுது, நித்தியத்தை அடைந்துகொள்ளத்தக்கதான முழுமையான பணியைச் செய்வோம்.Mar 176.2

    அந்த மாபெரும் நெருக்கடி நேரம் நமக்கு முன்பாக இருக்கிறது. அந்த காலகட்டத்தின் துன்பங்களையும் சோதனைகளையும் சந்திக்கவும், அதற்கான கடமைகளைச் செய்யவும், விடாமுயற்சியோடு கூடிய விசுவாசம் தேவைப்படுகிறது; அப்பொழுதுதான், மகிமையாக வெற்றிசிறக்க முடியும். விழிப்போடிருக்கின்ற-ஜெபித்துக்கொண்டிருக்கின்ற-விசுவாசத்தோடிருக்கின்ற, ஒரு ஆத்துமாவை சத்துருவால் கண்ணியில் அகப்படுத்தமுடியாது.⋆Mar 176.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 176.4

    “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.” - சங்கீதம் 34:10.Mar 176.5