Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    எல்லாவற்றையும் சோதித்துப்பாருங்கள்!, மே 27

    “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” - மத்தேயு 7:15.Mar 293.1

    தேவனுடைய அருட்செயலால், ஊழியத்தின் ஆரம்பநாட்களிலிருந்தே, அதாவது 1843,1844-ம் ஆண்டுகளிலிருந்து, தேவனுடைய பணியில் ஒரு பங்குவகிக்கத்தக்கதாக, நானும் எனது கணவரும் அழைக்கப்பட்டோம். அந்த ஊழியத்தை உருவாக்கித் திட்டமிடத்தக்கதாக ஆண்டவர் எங்களுடன் இருந்தார். அவருடைய ஜீவனுள்ள செயல்துணைகளின்மூலமாக, அவரது திட்டங்களை எங்களுக்காக திறம்படச் செய்துகொடுத்தார். பொய்யான பாதைகள் அடிக்கடி தெளிவாக எங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டன. நாங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட வேலையோடு தொடர்புடைய அனைத்து இடர்நிறைந்த முயற்சிகளிலும், உண்மையான-பாதுகாப்பான பாதைகள் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டன. சாத்தானின் உபாய தந்திரங்கள்பற்றியோ அல்லது தேவனுடைய வழிகள் மற்றும் கிரியைகள்பற்றியோ நான் ஒன்றும் அறியாதவளாக இருக்கவில்லையென்று உண்மையாகக் கூறமுடியும். எங்களுடைய ஆராய்ச்சிகளிலே எங்களை வழிநடத்தத்தக்கதாக, தேவ ஞானத்தின் மீது சார்ந்திருந்து, மனதின் அனைத்து சக்திகளையும் கடுமையாகப் பயன்படுத்தவேண்டியதிருந்தது. தேவனுடைய வார்த்தையினின்று பிரகாசிக்கும் வெளிச்சத்தின்மூலமாகவும், அவரது வார்த்தை மற்றும் சாட்சிகளின்மூலமாக, தேவன் எனக்கு வெளிப்படுத்திய காரியங்களின்மூலமாகவும், எங்களது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட அனைத்து கோட்பாடுகளையும், நாங்கள் மறுசீராய்வு செய்யவேண்டியதிருந்தது; மேலும், அவைகளின் நிறைகளையும் குறைகளையும் கண்டறியவேண்டியதிருந்தது. நாங்கள் மற்றவர்களை ஏமாற்றாமலிருக்கவும் அவ்வாறு செய்தோம்; எங்களுடைய சித்தத்தையும் வழியையும் தேவனிடத்தில் ஒப்படைத்தோம்; அவரது உதவிக்காக மிகவும் ஊக்கமாக மன்றாடி ஜெபித்தோம்; இந்த முயற்சி ஒருபோதும் வீணாகிவிடவில்லை . தேவனுடைய ஊழியத்தின் தொடர்போடுகூடிய, அநேக ஆண்டுகளில் பெற்ற துயரமான அனுபவங்கள், அனைத்து வகையான பொய்யான இயக்கங்களைப்பற்றியும் எனக்கு நல்ல அறிமுகம் ஏற்படச்செய்தது. அநேக சந்தர்ப்பங்களில், “எனக்கு அந்த இடத்திலே நீ செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டு. நான் உன்னுடனே இருப்பேன்” என்ற தூதோடு நான் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டேன். அந்தச் சந்தர்ப்பம் வந்தபோது,(சாத்தனால்) பொய்யான சொப்பனங்களையும் தரிசங்களையும் பெற்றவர்களுக்கு ஆண்டவர் என்னிடத்தில் கொடுக்கும்படியாக ஒரு தூதைக் கொடுத்தார். கிறிஸ்துவின் பலத்தினாலே, அவருடைய ஆணையின்படி, நான் எனது சாட்சியைக் கொடுத்தேன்…Mar 293.2

    கடந்த 45 ஆண்டுகளில், மற்றவர்களுக்கான கடிந்துரைக்கும் தூதுகளை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டோமென்று உரிமை கோரிய நபர்களை நான் சந்தித்திருக்கிறேன். மார்க்க சம்பந்தமான கொள்கைவெறியின் இந்த காலக்கட்டமானது, 1844-முதல் மீண்டும்மீண்டும் தலைதூக்கியது. தவறுகளை நிலைநாட்டத்தக்கதாக, அநேக வழிகளில் சாத்தான் கிரியைசெய்தான். இந்த தரிசனங்களில் பேசப்பட்ட சில காரியங்கள் நடைபெற்றன; ஆனால், அநேகக் காரியங்களில் உதாரணமாக, கிறிஸ்துவின் வருகையின் நேரம், கிருபையின் கால முடிவு, நடைபெறவேண்டிய சம்பங்கள் ஆகியவைபற்றி அவனால் கூறப்பட்ட காரியங்கள் முற்றுலுமாகப் பொய்யென்று நிரூபிக்கப்பட்டது…Mar 294.1

    “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்…” -லூக்கா 8:18; இது கிறிஸ்து கொடுக்கும் எச்சரிப்பாகும்…மிகக் கவனமாகச் சோதித்துப்பாருங்கள். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” -1 தெசலோனிக்கேயர் 5:21; இது தேவன் கொடுக்கும் ஆலோசனையாகும்; நாம் இதைக் கவனிப்போமா?⋆Mar 294.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 294.3

    “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.” - 2 சாமுவேல் 22:29.Mar 294.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents