Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புரொட்டஸ்டாண்டு மார்க்கம் பாப்பு மார்க்கத்தோடு இணைகிறது!, ஜூன் 28

    “நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.” - வெளிப்படுத்தல் 17:12,13.Mar 357.1

    இறுதி நெருக்கடி நேரத்தை நாம் நெருங்குபொழுது, ஆண்டவரது கருவிகளாகப் பணிசெய்கின்றவர் மத்தியில் ஐக்கியமும் இணக்கமும் நிலைத்திருப்பது அந்தக் கணத்திலே முக்கியத்துவம் பெற்றதாகும். உலகம் கொந்தளிப்பாலும், யுத்தத்தாலும், ஒற்றுமை இன்மையினாலும் நிறைந்திருக்கிறது; எனினும், பாப்பானவரது வல்லமையின் ஒரே தலைமைக்கடியில் அவர்களது சாட்சியின் சார்பாக நிற்கும் தேவனை மக்கள் ஒன்றுகூடுவார்கள்.Mar 357.2

    இந்த வல்லமைக்கு தனது இராஜ்யத்தைக் கொடுக்கின்றது எது? புரொட்டஸ்டாண்டு மார்க்கமேயாகும். இந்த புரொட்டஸ்டாண்டு வல்லமையானது, ஒரு ஆட்டுக்குட்டியின் குணமும் ஆவியும் உடையதென்றும், பரலோகத்தோடு தொடர்புடையது என்றும் சொல்லிக்கொண்டாலும், வலுசர்ப்பத்தின் குரலிலே பேசுகிறது. அடிமட்டத்திலிருந்துவரும் ஒரு வல்லமையால் அது அசைக்கப்பட்டிருக்கிறது.Mar 357.3

    “அவர்கள் ஒரே மனமுடையவர்களாக இருப்பார்கள்.” உலகம் முழுவதும் ஒரே ஐக்கியத்தில், ஒரு மாபெரும் இணக்கத்தில், சாத்தானின் வல்லைமையின் ஒரு நேசக்கூட்டுறவிலே இருக்கும். அவர்கள் தங்களது வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். பாப்பதிகாரத்தின்மூலமாக வெளிப்படுத்தப்பட்டபடி, அதே கொடுங்கோன்மையான-ஒடுக்குகின்ற வல்லமை, மார்க்க சுதந்திரத்திற்கும் மனசாட்சியின் கட்டளைப்படி தேவனை வணங்குவதற்குவேண்டிய சுதந்திரத்திற்கும் எதிராக வெளிப்பட்டது. கடந்த காலங்களிலே ரோமானிய வழிபாட்டு முறைமைகளுக்கும் சடங்காச்சாரங்களுக்கும் இசைந்துபோக மறுக்கத் துணிந்தவர்களை உபத்திரவத்திற்குள்ளாக்கியது.Mar 357.4

    கடைசி நாட்களிலே நடைப்பெறப்போகிற யுத்தத்திலே, தேவனுடைய மக்களுக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகும். யேகோவாவின் கட்டளைக்கு உத்தமமாயிராமல், மருளவிழுந்து போன அனைத்துவித கேடான வல்லமைகளும் ஒன்றுசேரும். இந்த யுத்தத்திலே மாபெரும் முக்கியமான காரியம், நான்காம் கற்பனையிலுள்ள ஓய்வுநாளே; ஏனெனில், இந்த ஓய்வுநாள் கட்டளையிலே பிரமாணத்தைக் கொடுத்த மகா தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தவரென்று தம்மை அடையாளம் காட்டுகிறார்.Mar 358.1

    “ஆத்துமா அழியாதது” என்ற கொள்கை, “ஞாயிற்றுக் கிழமைக்குரிய பரிசுத்த தன்மை” ஆகிய இரண்டு மாபெரும் பிழைகளின்மூலமாக, சாத்தான் தனது வஞ்சகத்தினடியில் மக்களைக் கொண்டுவருவான். முதல் பெரும் பிழை-அதாவது: “ஆத்துமா அழியாதது” என்பது, ஆவிமார்க்கத்திற்கு அடித்தளம்போடுகிறது. இரண்டாவது பிழையானது: “ரோமாபுரியோடு உணர்ச்சி ஒருமைப் பாட்டின் ஒரு உறவை உருவாக்கியிருக்கிறது.” அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள புரொட்டஸ்டாண்டுகள் ஆவிமார்க்கத்தின் கரத்தைப் பற்றிப்பிடிக்கத்தக்கதாக, பெரும் பிளவிற்குக் குறுக்கே தங்களது கரங்களை நீட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். இந்த இரண்டு (புரொட்டஸ்டாண்டுகளும் ஆவிமார்க்கமும்) வல்லமைகளும் சேர்ந்து, மாபெரும் பிளவிற்கும் அப்பால் இருக்கும் ரோம வல்லமையோடு கைகோர்க்கும். இத்தகைய முக்கூட்டு உறவின் செல்வாக்கிற்கு அடியில், மனசாட்சியின் உரிமையை மிதித்துப் போடுவதில், ரோமாபுரியின் அடிச்சுவட்டை இந்த நாடு (U.S.A.) பின்பற்றும்.⋆Mar 358.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 358.3

    “தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.” - சங்கீதம் 84:11.Mar 358.4