Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தின் குடிமக்கள்! , மார்ச் 8

    “ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகலுமாயிராமல், பரிசுததவாங்களிடையே ஒரே நரகத்தரும் தேவனுடைய வீட்டருமாயிருந்து, அப்போஸ்தலர் தீயக்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமோ யிருக்கிறார்கள்...” — எபேசியர் 2:19,20.Mar 133.1

    “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று இயேசு கூறுகிறார். இந்த வார்த்தைகளை எப்பொழுதும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். ஆண்டவரின் வருகை சீக்கிரமாக இருக்கிறது. நாம் இந்த பூமியில் அந்நியரும், பரதேசிகளுமாயிருக்கிறோம் என்று நிச்சையமாக நம்புகிறதுபோல் நடந்துகொள்ள வேண்டும். தேவ அன்பானது ஆத்துமாவில் மென்மேலும் பெருகத்தக்கதாக, கிருபையின் ஒவ்வொரு வழிவகையும் கடுமையாக உழைத்து விருத்திசெய்யப்பட வேண்டும். “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,” “...நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும், இடறலில்லாதவர்களாகயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.” உங்களது கிறிஸ்தவ வாழ்க்கை உயரோட்டத்துடனும், மன உரத்தோடும் அமைந்திருக்கட்டும். வேதாகமத்தின்மூலமாக உங்களுக்கு முன்னால் அடையமுடியும். நீங்கள் முன்னேரிச்செல்ல வேண்டும்; அல்லது பின்வாங்கிப்போக வேண்டும்... கிறிஸ்தவ வளர்ச்சியிலே குறைந்து காணப்படுவீர்களா? அல்லது தெய்வீக வாழ்க்கையிலே ஆரோக்கிரமான முன்னேற்றத்தை அடைவீர்களா? எங்கு ஆவிக்குரிய ஆரோக்கியம் உண்டோ, அங்கு வளர்ச்சியும் இருக்கும். தேவனுடைய பிள்ளை கிறிஸ்துவில் முழு மனிதனாக-மனுஷியாக முழுவளர்ச்சியை அடைகிறார். அவர் அடைகிற மேம்பாட்டிற்கு எல்லை எதுவும் கிடையாது...Mar 133.2

    கிறிஸ்துவிலே பலமாக நிலைநாட்டப்படுபவர்களாக இருக்க வேண்டிய சிலர், தேவனுடைய ஆவியானவரின் ஊழியங்களைக் குறித்த காரியத்தில், அனுபவத்திற்குப் பின்னரும், கிறிஸ்தவ மார்கத்தை அமைத்து உருவாக்கியுள்ள மாபெரும் விசுவாசம், மற்றும் மூலக்கோட்பாடுகளுடைய அமைப்பிலே இருக்கின்ற ஆரம்பக் கொள்கைகளை மாத்திரமே புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். “நன்றாகச் செய்தாய் என்ற பாராட்டை பெறக்கூடிய அளவிற்கான, அப்படிப்பட்ட குணத்தின் பரிபூரணத்தை அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை. நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய மாபெரும் வெற்றிகள் உண்டு. அந்த வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவிட்டால், இழக்கவேண்டிய ஒரு பரலோகம் உண்டு. உலகப்பிரகாரமான மாம்ச இதயம் சிலுவையில் அறையப்பட வேண்டும்; ஏனெனில், அதன் போக்கானது, ஒழுக்கச் சீர்கேடுடையதாயிருக்கிறது. அதன் முடிவு மரணமே... பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் வல்லமைகளுக்காக ஜெபியுங்கள்; இவ்வாறு, ஒவ்வொரு நரம்பும் புதிய வாழ்கையின் துடிப்பை பெறத்தக்கதாக மரித்துப்போன, பூமிக்கடுத்த சிற்றின்பத்தில் தோய்ந்துப்போன நிலையினின்று ஆவிக்குரிய முழுமையான நிலைமையை பெற்றுக் கொள்ளததக்கதாக ஜெபியுங்கள்; இவ்வாறு, நீங்கள் தெய்வீக இயல்பிற்குப் பங்காளிகளாக மாறுவீர்கள்... அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடைகிறீர்கள்; அவரது சாயல் உங்கள் ஆத்துமாக்களிலே பிரதிபலிக்கும்.⋆Mar 134.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 134.2

    “சாந்தகுணமுள்ளவர்கள் புசித்து திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.” - சங்கீதம் 22:26.Mar 134.3