Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கொள்கைவெறியும் பல பாஷைகள் பேசுதலும்!, மே 26

    “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவானகளுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.” - 1 கொரிந்தியர் 14:32,33.Mar 291.1

    ஓய்வுநாளை ஆசரிப்பவர்களில், ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை கொள்கைவெறியின் ஆவியானது ஆளுகை செய்திருக்கிறது…அவர்கள் சத்திய ஊற்றிலே சிறிதளவாகவே உறிஞ்சிக் குடித்திருக்கிறார்கள். மூன்றாம் தூதனுடைய தூதின் ஆவியுடன் அவர்கள் அறிமுகமாகவில்லை. இவர்களது கொள்கைவெறிபிடித்த கருத்துகள் திருத்தப்படும்வரை, இந்த வகுப்பாருக்கு எதுவும் செய்யமுடியாது…Mar 291.2

    இந்த நபர்களில் சிலர் வெளிப்படுத்துகின்ற செயல்களை, வாங்கள் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அவர்களை ஆண்டவர் சபையில் வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். அவர்களிடத்தில் பொருள் விளக்கமற்ற-தெளிவற்ற பேச்சு இருக்கிறது. அதை அவர்கள் அறியாத பாஷை என்று அழைக்கிறார்கள். இது மனிதனுக்கு மட்டுமல்ல, ஆண்டவருக்கும் பரலோகம் முழுவதற்குமே அறியாத ஒரு பாஷையாகும். மாபெரும் வஞ்சகனின் உதவியால் ஆண்களும் பெண்களும் இத்தகைய வரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைவெறி, பொய்யான பரபரப்பு, பாஷைகளில் பொய்யாகப் பேசுதல், கூச்சலோடு வெளிப்படுத்துகின்ற செயல்கள் ஆகிய அனைத்தும் வரங்கள் என்றும், இவைகளை சபையிலே தேவன் கொடுத்திருக்கிறார் என்றும் எண்ணப்படுகின்றன். இங்கே சிலர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்திலும் காணப்படும் கனிகள் நல்லவைகளாக இருக்கவில்லை…Mar 291.3

    கட்டுப்பாட்டிற்கும் அமைப்பிற்கும் ஒழுங்கிற்கும் கீழ்ப்படியாத அநேக அமைதியற்ற ஆவிகளும் உண்டு. அவர்கள் தங்களுடைய சொந்த மதிப்பீடுகளை ஒதுக்கிவைத்து, அனுபவம்வாய்ந்தவருடைய தீர்மானங்களுக்குக் கட்டுப்படுவார்களானால், தங்களது தன்னாட்சி உரிமைகள் குறைக்கப்பட்டுவிடுமென்று நினைக்கிறார்கள். தங்களது கூட்டங்களிலிருந்து, அசட்டை செய்கின்ற ஒழுங்கீனமான கொள்கைவெறியின் ஆவியைக் கட்டளையிட்டு, வெளியேற்றி, கட்டுப்படுத்துகின்ற மனப்பாங்கு இருந்தாலொழிய தேவனுடைய வேலை முன்னேற்றமடையாது. எண்ணப்பதிவுகளும் உணர்வுகளும், ஆண்டவரால் ஒருவர் நடத்தப்படுகிறார் என்பதற்கு உறுதியான ஆதாரமல்ல. சாத்தானும், அவனைக்குறித்து நாம் சந்தேகப்படாவிட்டால், எண்ணப்பதிவுகளையும் உணர்வுகளையும் கொடுப்பான்; இவைகள் பாதுகாப்பான வழிகாட்டிகளல்ல. அனைவரும் தங்களை முழுக்கமுழுக்க நமது விசுவாசத்திற்கான ஆதாரங்களோடு அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்கிற காரியங்களுக்கு ஏற்றபடி, தங்களை அணிசெய்துகொண்டு, தேவனுக்கு மகிமையாகக் கனிகொடுக்க வேண்டும்…ஒரு அற்புதமான-கேலிசெய்கின்ற-அசட்டையான ஆவி கண்டிக்கப்பட வேண்டும். ஜெபக்கூட்டங்களில் திறமையுடன் பிரசங்கித்து, ஜெபித்துவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேவந்தபின், கரடுமுரடாக, கவனமற்ற தன்மையில் பேசுவதும் செயல்புரிவதும் அவரது இதயத்திலே தேவ கிருபை இருப்பதற்கான ஆதாரம் என்று ஏற்றுக் கொள்ளமுடியாது…Mar 291.4

    தேவனுடைய சத்தியமானது, ஒருபோதும் மனிதனை இழிவு நிலைக்குக் கொண்டுவராது; ஆனால், சத்தியத்தைப் பெற்றுக் கொள்பவரை உயர்த்தி, அவரது விருப்பத்தை நயப்படுத்தி, அவரது தீர்மானங்களைப் பரிசுத்தமாக்கி, தேவனுடைய இராஜ்யத்திலுள்ள தூய்மையான-பரிசுத்தமான தூதர்களோடுகொள்ளும் கூட்டுறவிற்காக அந்த நபரை நிறைவுசெய்கிறது.⋆Mar 292.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 292.2

    “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.” - உபாகமம் 15:4,5.Mar 292.3