Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானின் வல்லமையால் செய்யப்படும் அற்புதங்கள் - 2, ஜூலை 19

    “அன்றியும் அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து புமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாக பெரிய அற்புதங்களை நடப்பித்து...” -வெளிப்படுத்தல் 13:13.Mar 399.1

    இறுதி நாட்களின் ஆபத்துக்களை தேவனுடைய மக்கள் நெருங்கிவரும்பொழுது, அவர்களது விசுவாசத்தை முறியடிக்கத்தக்கதான, மிகவும் வெற்றியுள்ள ஒரு திட்டத்தைத் தீட்டுவதற்காக சாத்தான் தனது தூதர்களோடு ஊக்கமாகக் கலந்து, ஆலோசனை நடத்துகிறான். தனது வஞ்சக வல்லமையால் பிரபலமான சபைகளையெல்லாம் ஏற்கெனவே தாலாட்டி, நித்திரைசெய்ய வைத்துவிட்டான் என்பதை அவன் காண்கிறான். நயமான குதர்க்கங்களாலும், பொய்யான அற்புதங்களாலும் தொடர்ந்து அவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்; எனவே, குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து, தேவனுடைய அனைத்துக் கற்பனைகளையும் கைகொள்ள வேண்டுமென்று முயற்சிசெய்கிற அனைவர்மீதும் தங்களது கண்ணிகளை வைக்கும்படியாக, சாத்தான் தனது தூதர்களை வழிநடத்துகிறான்.Mar 399.2

    இறுதி நாட்களிலே, அடையாளங்களையும் பொய்யான அற்புதங்களையும் சாத்தான் செய்வான் என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம். தவணையின் காலம் முடிவடையும்வரை இந்த அற்புதங்களைத் தொடர்ந்து செய்வான், தான் இருளின் தூதனல்ல, ஒளியின் தூதன்தான் என்பதற்கு இதை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுவதற்காக், அவன் இவ்வாறு செய்வான்.Mar 399.3

    கூடுமானால், தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் சாத்தான் வஞ்சிக்க வருவான். அவன் தான் கிறிஸ்துவென உரிமை கோரிக் கொண்டு, தன்னை ஒரு மாபெரும் மருத்துவ இறைப்பணியாளர் என மாய்மாலம்செய்துகாட்டுபவனாக வருவான். தான் கடவுள் என்று நிரூபிப்பதற்காக, மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியை இறங்கச்செய்வான்.Mar 399.4

    சாத்தான் தனது பொய்யான அற்புதங்களினால், இந்த முழு உலகத்தையும் சிறைப்பிடித்துக்கொள்வான். மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணுவான்; வான் அற்புதங்களை நடப்பிப்பான்; அவனது அதிசயமான இந்த அற்புதங்களின்மூலம் முழு உலகமும் வாரிக்கொண்டு போகப்படும்.Mar 400.1

    இந்த அற்புதங்கள் தேவனிடத்திலிருந்து வந்தவைகள் என்று ஏற்றுக்கொள்ளும்படியாக, சிலர் சோதிக்கப்படுவார்கள். நமக்கு முன்பாக, பிணியாளிகள் சுகமடைவார்கள். நமக்கு முன்பாக, அற்புதங்கள் நடப்பிக்கப்படும். சாத்தானது பொய்யின் அற்புதங்கள் முற்றிலும் பகிரங்கமாகக் காட்டப்படும் பொழுது, வரவிருக்கின்ற உபத்திரவ காலத்தைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோமோ? அநேக ஆத்துமாக்கள் கண்ணியில் அகப்படும், எடுத்துக்கொள்ளப்பட்டுப்போவார்கள் அல்லவா? தேவனுடைய தெளிவான கட்டளைகள், கொள்கைகளினின்று விலகுவதின் மூலமும், கட்டுக்கதைகளுக்குச் செவிசாய்ப்பத்தின்மூலமும். இவ்வித பொய்யான அற்புதங்களை ஏற்றுக்கொள்ள அநேக மனிதரின் உள்ளங்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றன. நாம் வெகுசீக்கிரத்தில் ஈடுபடப்போகிற இந்தப் போராட்டத்திற்காக, போர்க்கால கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தவர்களாக, ஜெபசிந்தையோடு படித்துச் செயல்படுவதே சாத்தானின் வல்லமையினின்று நம்மைக் காக்கும் கேடகமாக இருக்கும்; மேலும், கிறிஸ்துவின் இரத்தத்தினால் அது நம்மை வெற்றியாளர்களாகவும் வெளியே கொண்டுவரும்.⋆Mar 400.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 400.3

    “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” - சங்கீதம் 50:15.Mar 400.4