Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உத்தம விசுவாசிகள் விழுந்துபோகமாட்டார்கள்!, ஜனவரி 20

    “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்.” - வெளிப்படுத்தல் 14:12.Mar 39.1

    வேதவாக்கியங்களை வாசிப்பதற்கும், ஆராய்வதற்கும், மானிட ஞானத்திற்கும் மேலான ஞானம் இப்பொழுது நமக்கு அவசியமாகும். தாழ்மையான இதயங்களோடு தேவனுடைய வார்த்தையை நாம் அணுகுவோமானால், இந்த உலகின் கட்டுப்பாடற்ற சக்திகளுக்கு எதிராக, நமக்கு அவர் ஒரு கோடியை உயர்த்துவார். நமது நம்பிக்கையின் ஆரம்பத்தை இறுதிவரை உறுதியாகப் பிடித்துக்கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். இது சமபந்தமான காரியத்தில் சாத்தானின் பக்கத்த்தில் எதிரிடையாக வேலைசெய்கின்ற வேறொரு சக்தி, தொடர்ந்து - மறைவாக அதின் செல்வாக்கைப் பயன்படுத்துவதால், நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. உபத்திரவம் இல்லமால் இருக்கும்பொழுது, சந்தேகிக்க இடமின்றி நல்ல உறுதியான கிறிஸ்தவர்கள்போன்று காணப்படுகிறவர்கள் நமது அணியில் இணைந்துகொள்கிறார்கள்; ஆனால், இத்தகையோர் துன்பங்கள் வரும்பொழுது, நம்மைவிட்டு வெளியேறிவிடுவார்கள். நெருக்கடி நேரத்திலே, தங்களது உள்ளங்களிலே செல்வாக்குபெற்ற, நம்பக்கூடிய தோற்றமளிக்கின்ற, வாதத்திற்கு ஒத்த காரியங்களில், ஏதோ ஒரு சக்தி இருப்பது போன்று காண்கிறார்கள். சாத்தான் பலதரப்பட்ட உள்ளங்களுக்கு ஏற்றவாறு, பலவிதமான கண்ணிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். தேவனுடைய பிரமாணமானது, பயனற்றதாக ஆக்கப்படும் பொழுது, சபையானது பல கொடுமையான உபத்திரவங்களினால் சலிக்கப்படும். நாம் இப்பொழுது எதிர்பார்க்கிறதைவிட, ஏராளமான மக்கள் வஞ்சிக்கும் ஆவிகளுக்கும், பிசாசுகளின் கொள்கைகளுக்கும் செவிசாய்ப்பார்கள். இக்கட்டான இடங்களில் கொண்டு வரப்படும்போது, பலப்படுவதற்குப் பதிலாக, உண்மையான திராட்சைச் செடியின் ஜீவனுள கொடிகளாக தாங்கள் நிலைத்திருக்கவில்லை என்பதை நிரூபித்துவிடுவார்கள்...Mar 39.2

    தேவனுடைய பிரமாணத்தை இந்த உலகமானது பயனற்றதாகச் செய்யும்பொழுது, உண்மையாகவே கீழ்ப்படிதலிலும், நீதியிலும் வாழும் மக்கள்மீது எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது? இந்தத் தீய சக்தியின் பலமான போக்கிலே அடித்துச் செல்லப்பட்டு விடுவார்களா? இருளின் பிரபுவாகிய சாத்தானின் கொடியின்கீழ் அநேகர் அணிவகுத்து நிற்பதால், தேவனுடைய பிரமாணத்தை கைக்கொண்டு நடக்கும் மக்கள் பற்றுறுதியிலிருந்து விலகி விடுவார்களா? ஒருபோதும் விலகமாட்டார்கள்! கிறிஸ்துவிலே நிலைத்திருக்கும் ஒவ்வொருவரும் தவறவும்மாட்டார்கள், விழுந்து போகவும்மாட்டார்கள். அவரது பின்னடியார்கள் உலகத்தில் ஆட்சி செய்யும் எந்த அரசர்களுக்கும் தாழ்ந்து பணிவதைவிட, அதற்கும் மேலான அதிகாரத்திற்கு (தேவனுக்கு) கீழ்ப்படிதலோடு வணக்கஞ் செலுத்துவார்கள். தேவனுடைய பிரமாணங்கள் இகழ்ச்சிசெய்யப் படும்போது, அநேகர் சத்தியத்தை அடக்கி, மட்டுப்படுத்தி, குறைந்த மதிப்பையே காட்டுவார்கள்; ஆனால், உத்தமமான மக்கள் அதிக ஊக்கத்தோடு தனிச்சிறப்புள்ள மேன்மையான சத்தியங்களை உயர்த்திப்பிடிப்பார்கள். நாம் நமது போக்கிற்கு, தனித்து விடப் படுவதில்லை... தாழ்மையான இதயங்களோடு அவரது வசனத்தை ஆராய்ந்து, அவருடைய ஆலோசனையைக்கேட்டு, நமது சித்தத்தை அவருடைய சித்தத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டும். தேவனுடைய உதவியின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது.⋆Mar 40.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 40.2

    “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.” - சங்கீதம் 119:1Mar 40.3