Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சரியான அணியில் வந்துசேருதல்!, மே 31

    “சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.” - சங்கீதம் 69:32.Mar 301.1

    ஆண்டவரில் மகிழ்ச்சியோடிருப்பதும், அவரது வலுவூட்டும் கிருபையைப்பற்றிய அறிவிலே களிகூர்ந்திருப்பதும் உங்களுடைய சிறப்புரிமையாகும். உங்களது சிந்தனைகளையும் இதயத்தையும் அவரது அன்பு உடைமையாகக் கொள்ளட்டும். மிதமிஞ்சிகளைப் படைதல், கவலை தோய்ந்த முகத்தோடிருத்தல், சோர்ந்திருத்தல் ஆகியவைகளுக்கெதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; ஒரு உயர்த்துகின்ற சாட்சியை அளியுங்கள்; இருண்டு, அதைரியப்படுத்தும் காரியங்களினின்று உங்கள் கண்களைத் திருப்புங்கள். நமது மாபெரும் தலைவரான இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவருடைய விழிப்புள்ள மேற்பார்வைக்கடியில், எந்த நிகழ்கால சத்தியத்திற்காக நமது ஜீவியத்தையும் நமக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோமோ, அந்த நிகழ்கால சத்தியமானது முடிவிலே மகிமையாக வெற்றியடையக் காத்திருக்கிறது…Mar 301.2

    ஆ!...இயேசு இதயத்தில் வாசம்பண்ணிக்கொண்டிருக்கிறார் என்றும், அவர் நம்மைத் தாங்குகிறார்-பலப்படுத்துகிறார்-தேற்றுகிறார் என்றும் காரியங்கள் காணப்படட்டும். ஒவ்வொரு நாளும் அவரது பரிசுத்த ஆவியானது, ஒரு வளம்செறிந்த அளவிலே நமக்கு வழங்கப்படுவது, நமது சிறப்புரிமையாகும். நாம் உலகத்திற்குக் கூறியறிவிக்கின்ற தூதின் முக்கியத்துவம், அதின் குறி, இலக்கைப்பற்றியும் விரிவான கருத்துக்களை நாம் கொண்டிருக்க வேண்டும். நமதாண்டவர் அவரது பிரமாணத்தினின்று அதிசயமான காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்த விருப்பத்தோடிருக்கிறார். மனத்தாழ்மையோடு அவருக்கு முன்பாகக் காத்திருங்கள். நாம் வாழ்கின்ற காலங்களைப்பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காகவும், அவருடைய நோக்கத்தின் கருத்துக்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காகவும், ஆத்தும ஆதாய ஊழியத்திலே திறமைகள் பெருகுவதற்காகவும் ஊக்கமாக ஜெபியுங்கள்…Mar 301.3

    இந்த உலகத்தின்மீது சீக்கிரமாக வரப்போகின்ற காரியத்தைக் குறித்து சிந்திப்பது, ஆழ்ந்து ஆராய்வது நமக்கு நன்மையாக இருக்கும். அற்பமான காரியங்களுக்கும் அல்லது சுயத்திற்கான காரியங்களைத் தேடுவதற்கும் நேரமில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலங்கள் கருத்தோடு எண்ணப்பதிவை ஏற்படுத்தத் தவறுமானால், எதுதான் நம்மைச் சரிப்படுத்த முடியும்?...Mar 302.1

    தெளிவாகப் புரிந்துகொள்ளும் மனிதர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். முழு நிறைவான சீர்திருத்த ஊழியம் ஒன்றிலே வழி நடத்த, பரிசுத்த ஆவியினால் அடக்கியாளப்படுவதற்கு விருப்பமானவர்களை தேவன் அழைக்கிறார். நமக்கு முன்பாக நெருக்கடி மிகுந்த ஒரு நேரம் இருப்பதைக் காண்கிறேன். ஆண்டவர் தமது வேலையாட்களை வரிசையில் வந்துநிற்கும்படி அழைக்கிறார். கடந்த ஆண்டுகளைவிட, இப்பொழுது தேவனுக்கு ஆழமான-உண்மையான-அர்பணிப்பின் நிலையிலே ஒவ்வொரு ஆத்துமாவும் நிற்க வேண்டும்…Mar 302.2

    சமீபத்தில் இரவுவேளையில் எனக்கு முன்பாகக் கடந்துசென்ற காட்சிகளால் நான் ஆழமாக உணர்த்தப்பட்டேன். ஒரு மாபெரும் இயக்கம் ஒன்று காணப்பட்டது; ஒரு எழுப்புதலின் ஊழியம் அநேக இடங்களில் முன்னேறிச்சென்றுகொண்டிருந்தது. தேவனுடைய அழைப்பிற்குச் செவிசாய்த்து, நமது மக்கள் வரிசையில் சேரத்தக்கதாக நகர்ந்துசென்றுகொண்டிருந்தார்கள். நாம் அவரது சத்தத்தைக் கவனமாகக் கேட்கமாட்டோமா? நாம் நமது விளக்கின் திரியை ஒழுங்குபடக் கத்தரித்து, நேர்த்தியாக்கி, நமது ஆண்டவருடைய வருக்கைக்காக, நோக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களைப்போல் நடந்துகொள்ள மாட்டோமா? விளக்கை ஏந்திச்செல்வதற்கும், முனைந்து செயல்படுவதற்கும் அழைப்பு விடுக்கின்ற நேரம்-இது!⋆Mar 302.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 302.4

    “கர்த்தருக்குப் பயன்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.” - சங்கீதம் 25:12.Mar 302.5