Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானிடமிருந்தும் குணமாகுதல் கிடைக்கலாம்!...?, மே 20

    “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” -1 பேதுரு 5:8.Mar 279.1

    சாத்தானின் போலியான வாதங்கள் இப்பொழுது ஏராளமாகப் பெருகிக்கொண்டிருக்கின்றன. சத்தியப் பாதையினின்று விலகுபவர்கள் தங்களைத் தாங்கும் தளத்தை இழந்துவிடுகிறார்கள். நங்கூரம் பாய்ச்சுவதற்கு இடமின்றி, பல மாறுபாடான கொள்கைகள் என்னும் காற்றுகளால் மோதியடிக்கப்பட்டு, ஒரு வஞ்சகத்தினின்று இன்னொரு வஞ்சகத்திற்கு மெல்லமெல்ல நகர்ந்து செல்வார்கள். சாத்தான் மகா வல்லமையோடு இறங்கியிருக்கின்றான். அநேகர் அவனது அற்புதங்களால் வஞ்சிக்கப்படுவார்கள்.Mar 279.2

    வருங்காலத்திலே, மாபெரும் விழிப்பான நிலை அவசியப்படும் என்று சொல்லும்படி நான் அறிவுறுத்தப்பட்டேன். தேவனுடைய மக்களுக்கு மத்தியில் ஆவிக்குரிய மதிகேடு காணப்படக்கூடாது. மனிதரின் மனங்களை அடக்கியாளத்தக்கதாக தீயசக்திகள் சுறு சுறுப்பாக ஈடுபட்டு முயற்சிசெய்துகொண்டிருக்கின்றன. கடைசி நாட்களில் வர்ப்போகும் நெருப்பிலே எரிக்கப்படுவதற்கு ஆய்த்தமாக மனிதர்கள் தங்களைக் கட்டுகளாக கட்டிக்கொண்டிருக்கின்றனர். கிறிஸ்துவையும் அவரது நீதியையும் உதறித்தள்ளுபவர்கள் உலகத்தில் வெள்ளம்போன்று பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும் போலி வாதங்களை ஏற்றுக்கொள்பவர்கள். கெர்ச்சிக்கிற சிங்கம் போல் யாரை விழுங்கலாம் என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற எதிராளியாகிய பிசாசை கிறிஸ்துவர்கள் தெளிவான அறிவோடும் விழிப்போடும் திடமாக எதிர்த்து நிற்கவேண்டும். அசுத்த ஆவிகளின் செல்வாக்கிற்கு அடியிலிருக்கும் மனிதர்கள், அற்புதங்களைச் செய்வார்கள்…Mar 279.3

    நாம் வஞ்சிக்கப்பட அவசியமில்லை. சாத்தான் மிக நெருக்கமாகத் தொடர்புகொண்டிருக்கின்ற அதிசயமான காட்சிகள் வெகு சீக்கிரத்தில் நடைபெறும். சாத்தான் அற்புதங்களைச் செய்வான என்று தேவனுடைய வார்த்தை உறுதியாகக் கூறியறிவிக்கிறது. அவன் மக்களை வியாதிப்படச்செய்து, பின்னர் தனது சாத்தானிய வல்லமையால் அவர்களிடமிருந்து அந்த வியாதியை திடீரென்று அகற்றிவிடுவான்; பின்னர், அவர்கள் குணமாக்கப் பட்டதாக எண்ணப்படுவார்கள். வெளிப்படையாகக் காணப்படும் இந்த குணமாகுதலின் வேலைகள், ஏழாம் நாள் வருகையாளர் சபையைச் சேர்ந்தவர்களை இடறலுக்கு உட்படுத்தும்…Mar 279.4

    இந்தவிதமான வெளிப்பாடுகளினிமித்தமாக, யார்மூலமாக குணமாகுதல் நடத்தப்பட்டதோ, அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமையில் இருக்கத் தக்கதாக, தேவனுடைய பிரமாணத்தை அவர்கள் அசட்டை செய்ததை மன்னிக்கத்தக்கதாகவும், அவர்கள் எந்த அளவிற்கும் எதையும் செய்வதற்கும் வல்லமையிருந்தபோதிலும, அவர்களுக்கு தேவனுடைய மாபெரும் வல்லமை இருக்கிறதென்று நாம் எண்ண முடியாது; முற்றிலும் மாறாக, அது மாபெரும் வஞ்சகனுடைய அற்புதஞ்செய்யும் வல்லமையே ஆகும். அவன் சன்மார்க்கப் பிரமாணத்தை மீறியவன்; அந்தப் பிரமாணத்தின் உண்மையான பண்பை மனிதர் அறியாதிருக்கத்தக்கதாக, அனைத்து உபாயங்களையும் முழுமையான தேர்ச்சியுடன் பயன்படுத்தி மனிதரைக் குருடாக்கிப்போடிகிறான். கடைசி நாட்களில் அவன் அடையாளங்களையும் பொய்யான அற்புதங்களையும் செய்வானென்று நமக்கு எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது. அவன்(சாத்தான்) இருளின் தூதனல்ல, ஒளியின் தூதனே என்பதற்கான ஆதாரத்தை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதற்காக, கிருபையின் காலம் முடிவடையும்வரை இந்த அற்புதங்களைத் தொடர்ந்து செய்வான்.⋆Mar 280.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 280.2

    “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.” - உபாகமம் 28:2.Mar 280.3