Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நித்திய உலகின் மகிமைகள்!, டிசம்பர் 13

    “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” - சங்கீதம் 16:11.Mar 693.1

    நித்திய உலகின் மகிமை எனக்குமும் திறந்துவைக்கப்பட்டது. நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்; பரலோகம், நாம் போராடி ஜெயித்து பெற்றுகொள்ளவேண்டிய இடம். மீட்கப்பட்டோரோடும், பரிசுத்த தூதர்களோடும், இவ்வுலக மீட்பராகிய இயேசுவோடும் சேர்ந்துவாழ நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்வதே நம் வாழ்வின் குறிகோளாக இருக்க வேண்டும். அந்த மகிமையான பரலோக நகரத்தின் காட்சியை நாம் ஒருதரம் கண்டால், இந்த பூமியில் வாழ ஒருபோதும் விரும்பமாட்டோம். இப்பூமியில் அழகான இடங்கள் உண்டு; இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடங்களைக் கண்டு, மகிழ்ந்து, சிருஷ்டிகளோடு அந்த இயற்கையை இணைத்துப்பார்த்து, அவரைத் துதிக்கிறேன்; ஆனால், நான் தேவனை நேசித்து, அவரது கற்பனைகளைக் கைக்கொண்டால், அதைவிட பன்மடங்கு சிறந்ததும், நித்திய மகிமை கொண்டதுமான இடம் எனக்காக பரலோகத்தில் ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.”Mar 693.2

    இந்த பூமி,... நெருப்பால் சுத்திகரிக்கப்பட்டபின்... மிக அழகானதாக விளங்கும். பச்சைப்பசேல் என்று காணப்படும் பசுமை வாடிப்போகவில்லை; அழகான ரோஜா மலர்களும், லீலி மலர்களும், மற்றும் பலவகையான மலர்களும் அங்கு உண்டு; ஒருபோதும் மங்காத-வாடாத-தங்களது அழகையும், வாசனையையும் இழந்து போகாத மலர்கள் அவை.Mar 693.3

    தற்போது நாம் பயந்து நடுங்கும் சிங்கம், ஆட்டுக்குட்டியுடன் படுத்துக்கொள்ளும். புதிய பூமியில் எங்கும் அமைதியும் ஒருமைப்பாடும் இருக்கும். எவ்வித பழுதுமின்றி புதிய பூமியின் மரங்கள் நேராகவும் உயரமாகவும் ஓங்கி நிற்கும்.Mar 693.4

    பரிசுத்தவாங்கள் மகிமையின் கிரீடத்தை தலைகளில் சூடியவர்களாக, கரங்களில் பொற்சுரமண்டலங்களை ஏந்தி, அவற்றை மீட்டிக்கொண்டும், மீட்பரின் அன்பைப்பற்றி பாடியவண்ணம், தேவனைத் துதித்தார்கள். புதிய பூமியின் மகிமைகளுக்கு மத்தியில், அவர்கள் உலகில் அடைந்த முந்தைய வருத்தங்களும் சோதனைகளும், பாடுகளும் மறக்கப்பட்டுபோகும்.Mar 693.5

    இந்தப்பூவுலகின் அழகானவைகள் எல்லாம் நமக்கு அந்த-வரப்போகிற உலகின் பளிங்கு நதியையும், பச்சைபசேலென்று இருக்கும் வயல்களையும், அசைந்தாடும் நெடிய மரங்களையும், ஜீவ ஊற்றுகளையும், ஜொலிக்கும் நகரத்தையும், நம் பரலோக வீட்டில் வெள்ளை அங்கி தரித்த பாடகர்களையும் நினைவு படுத்தட்டும். அந்த அழகை எந்த ஓவியனாலும் தீட்ட முடியாது; எந்த மனித நாவாலும் வர்ணிக்க இயலாது. இரட்சிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தைக் கற்பனை செய்து பார்ப்போம்; ஆனால், அதன் மகிமை நமது சிறந்த கற்பனையைவிட, மிக மிக மகிமையானது என்பதை நினைவிற்கொள்ளுதல் அவசியம்.Mar 694.1

    நீதிமான்கள் பெறப்போகும் பலன் மகத்துவமானது; அதை விவரிக்க மனித வார்த்தைகள் போதாது; அதைப் பார்த்தால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும்.⋆Mar 694.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 694.3

    “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்...” - லூக்கா 21:28.Mar 694.4