Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாவமும் பாவிகளும் அழிக்கப்படுதல்!, டிசம்பர் 5

    “இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - மல்கியா 4:1Mar 677.1

    தேவனின் நீதி நியாயங்களை அங்கீகரித்து, கிறிஸ்துவின் மேலாண்மைக்கு தலைவணங்கத்தக்கதாக, வரம்பிற்கு உட்படுத்தப்பட்டவனாக இருந்தபோதிலும், சாத்தானின் குணம் மாறவில்லை. தேவ அதிகாரத்தை எதிர்க்கும் ஆவி மீண்டும் விசை நீரோடையின் வெள்ளம்போல அவனைத் தாக்கியது. வெறியினால் நிறைந்து, இந்த மாபெரும் போராட்டத்தை விட்டுவிடக்கூடாது என்று அவன் தீர்மானிக்கிறான். இறுதிக்கட்டத்தில் நம்பிக்கையிழந்து, பரலோக இராஜவிற்கு விரோதமாக, துணிந்து போரடத்தக்கதாக நேரம் வந்திருக்கிறது. தன்னைச் சார்ந்த மக்களிடையே அவன் சென்று, அவர்களது ஆத்திரத்தைத் தூண்டிவிட்டு, உடனடி யுத்தத்திற்க்கு ஆயத்தமாகிறான்; ஆனால், அவனைச் சார்ந்த-தேவனுக்கு விரோதமாகக் கலகஞ்செய்து கோடிக்கணக்கானோரில், அவனது தலைமையை ஏற்றுக்கொள்ள அப்பொழுது எவரும் முன்வரவில்லை. அவன் வல்லமை முடிவிற்கு வந்துவிடுகிறது. சாத்தானை கிளர்ந்து எழச்செய்த, தேவன்மீதான அதே வெறுப்பு, துன்மார்க்கரையும் ஆட்டுவித்தது; ஆனால், அவர்களது காரியம் நம்பிக்கையற்றது என்றும், யேகோவாவிற்கு விரோதமாக அவர்கள் நிலைநிற்கமுடியாது என்றும் அவர்கள் காண்கிறார்கள். அவர்களது கோபம் சாத்தானுக்கு விரோதமாகவும், வஞ்சகத்தில் ஈடுபட்டிருக்கும் அவனது பிரதிநிதிகளுக்கு விரோதமாகவும் கிளர்ந்தெழுந்தது. பேய்த்தனமான வெறியோடு அவர்கள் மீது பாய்கிறார்கள்.Mar 677.2

    “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள். உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்”...“காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்த்ப்போடுவேன்... உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; இராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி, உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்... உன்னைப் பார்க்கிற எல்லாருடைய கணகளுக்கு முன்பாகவும், உன்னைப் பீமியின்மேல் சாம்பலாக்குவேன்... மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்” - எசேக்கியேல் 28:6-8, 16-19...Mar 678.1

    பரலோகத்தின் தேவனிடமிருந்து அக்கினி இறங்கி வந்தது. பூமி சின்னாபின்னமானது; பூமியின் ஆழங்களில் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் வெளிவந்தன. ஒவ்வொரு பிளவுகளிலுமிருந்தும் பட்சிக்கிற அக்கினி புறப்பட்டுவந்தது. கன்மலைகளில் அக்கினி பற்றியெரிந்தது. சூளையைப்போல எரிகிற நாள் வந்தது. மிகுந்து வெப்பத்தால் மூலகங்கள் உருகின. பூமியும் அதிலுள்ள வேலைப்பாடுகளும் பற்றியெரிந்தன.⋆Mar 678.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 678.3

    “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.” - சங்கீதம் 37:28.Mar 678.4