Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உலகமுடிவின் கடைசிநாட்களில் ஆகாரம் மற்றும் நிலங்கள்பற்றிய ஆலோசனைகள்…!,ஜூன் 22

    “ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.” - மத்தேயு 6:34.Mar 345.1

    இக்கட்டுக்காலத்தில், நமது உலகியல்சார்ந்த தேவைகளுக்காக ஏதாவது முன்னேற்பாடு செய்துவைத்தலானது, வேதாகமத்திற்கு முரண்பாடானது என்று, மீண்டும் ஆண்டவர் தரிசனத்தில் எனக்குக் காட்டியிருக்கிறார். பரிசுத்தவான்கள் தங்களது உணவிற்காக பொருட்களைச் சேர்த்துவைப்பார்களானால், அல்லது வயல்களில் இருக்குமானால், இக்கட்டுக்காலத்திலே யுத்தமும்,பஞ்சமும், கொள்ளைநோயும் நாட்டில் பெருகும்போது, வன்முறையாளர்களின் கரங்களால் அவைகள் பறித்துக்கொள்ளப்பட்டுவிடும். அந்நியர்கள்வந்து அவர்களது வயல்களை அறுவடைசெய்வார்கள்; அப்பொழுதுதான் நாம் தேவனையே முற்றிலுமாக உறுதியாக நம்பவேண்டிய நேரமாகும். அவர் நம்மை போஷிப்பார். அச்சமயத்தில் நமது அப்பமும் தண்ணீரும் நிச்சயமாகக் கிடைக்கும்; நமக்கு எதுவும் குறைவுபடாது; நாம் பசியினால் வருந்தவும்மாட்டோம். தமது பிள்ளைகளில் சிலர் ஆகாரப்பொருள்களின் விலைவாசி உயர்வதைக்கண்டு பயந்து, இக்கட்டுக்காலத்திற்காக ஆகாரப் பொருள்களை வாங்கிச் சேர்த்துவைப்பார்கள் என்று ஆண்டவர் எனக்குக் காட்டினார்; பின்னர், அந்த ஆகாரப்பொருட்களுக்கான தேவை ஏற்படும்போது, அதைச் சென்றுபார்த்தார்கள். அவை பூச்சி,புழு போன்ற உயிரினங்களால் நிறைந்து, பயன்படுத்துவதற்குத் தகுதியற்றதாக இருந்தது.Mar 345.2

    இக்கட்டுக்காலத்தில் பரிசுத்தவான்களுக்கு வீடுகளும் நிலங்களும் பயனற்றவைகளாயிருக்கும். வெறியுடன் கொந்தளிக்கும் கூட்டங்களுக்கு முன்பாக அவர்கள் தப்பியோட வேண்டியதிருக்கும்; அச்சமயத்தில் நிகழ்கால சத்தியத்தின் ஊழியத்தை முன்னேற்றுவிப்பதாக, அவர்களது உடைமைகளை விற்பனை செய்யமுடியாது…Mar 345.3

    யாராவது தங்களது சொத்துக்களைப் பாசத்தோடு பற்றிப் பிடித்தவர்களாக, அவைகளைக்குறித்து தாங்கள் செய்யவேண்டிய கடமை இன்னதென்று ஆண்டவரிடத்தில் வினவாமல் இருப்பார்களானால், அவரும் அக்கடமையை அவர்களுக்கு தெரியப்படுத்தமாட்டார். தங்களது சொத்தை வைத்திருக்கும்படி அனுமதிக்கப்படுவார்கள்; ஆனால், இக்கட்டுக்காலத்தின் நேரத்திலே, அவர்களை அது நசுக்கிப்போடத்தக்கதான அளவிற்கு, அவை அவர்களுக்கு ஒரு மலையைப்போன்று காணப்படும். அவர்கள் அதை விற்க முயற்சிசெய்வார்கள்; ஆனால், அவர்களால் அதை விற்கமுடியாது…மேலும், அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினார்களானால், எப்பொழுது விற்கவேண்டும், எவ்வளவு சொத்துக்களை விற்கவேண்டுமென்று, தேவையான நேரத்தில் அவர்களுக்குக் அறிவுறுத்துவார்.Mar 346.1

    சாத்தானோடு நடைபெறுகின்ற இந்த மாபெரும் எதிர்வாதத்தின் இறுதிப்போராட்டத்திலே, தேவனுக்கு உண்மையாக இருப்பவர்கள் இப்பூமியுலுள்ள அனைத்து ஆதரவும் தங்களுக்கு துண்டிக்கப்பட்டுப்போயிற்று என்பதைக் காண்பார்கள். பூமியின் அதிகாரங்களுக்கு கீழ்படிந்தும், தேவனுடைய பிரமாணத்தை அவர்கள் மீறுவதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்கள் வாங்கவும் விற்கவும் கூடாதபடி தடைவிதிகப்படும். இறுதியிலே அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டுமென்று தீர்ப்புக்கொடுக்க்பபடும்…ஆனால், கீழ்ப்படிபவர்களுக்கு: “அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகின்றது. இந்த வாக்குத்தத்தத்தினாலே தேவனுடைய பிள்ளைகள் உயிரோடிருப்பார்கள்-ஏசாயா 33:16.⋆Mar 346.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 346.3

    “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.” - சங்கீதம் 34:10.Mar 346.4