Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புதிய பூமியைப்பற்றிய யூகங்கள்!, டிசம்பர் 27

    “மரித்தோர் உயிரோடெழுந்திருக்கிம்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.” -மாற்கு 12:25.Mar 721.1

    திருமணங்களும் குழந்தை பிறப்பும் புதிய பூமியில் உண்டு என்று நம்பும் மக்கள் இன்று உள்ளனர்;ஆனால், வேதத்தை நம்பும் மக்கள் இத்தகைய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது; புதிய பூமியில் பிள்ளைகள் பிறக்கும் என்ற கோட்பாடு “உறுதியான தீர்க்கதரிசன” வார்த்தையின் ஒரு பகுதி அல்ல. தவறாகப் புரிந்துகொள்ளமுடியாதவகையில், கிறிஸ்துவின் வார்த்தைகள் மிகத்தெளிவாக உள்ளன. ஆகவே, புதிய பூமியில் திருமனம், பிள்ளைப்பேறு போன்ற கேள்விகளை அவர்கள் என்றைக்குமாக தீர்த்து முடிவுகட்டுவது நல்லது. மரித்தோரிலிருந்து எழுந்தவர்களிடமும், மரணத்தைக்காணாமல் மறுரூபமாக்கப்பட்டவர்களிடமும், ஒருபோதும் “கொள்வனையும் கொடுப்பனையும்” கிடையாது; அவர்கள் இராஜரீக குடும்பமாக, தேவதூதர்களைப் போல இருப்பார்கள்.Mar 721.2

    கிறிஸ்துவின் இந்தத் தெளிவான அறிக்கைக்கு விரோதமான கருத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். இப்படிப்பட்ட காரியங்களில் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. தேவன் தமது வார்த்தைகளின்மூலம் தெரியப்படுத்தாத காரியங்களில் நம் யூகங்களையும் கொள்கைகளையும் நுழைப்பது துணிகரமான செயல். நம் எதிர்கால நிலைமையைப்பற்றி எந்த யூகங்களும் உள்ளாக நாம் சொல்ல அவசியமில்லை...Mar 721.3

    “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை போதகம்பண்ணு.” அஸ்திபாரத்திற்கு, மரம், வைக்கோல், காய்ந்த புல் போன்ற நமது சொந்த சந்தேகங்களையும் யூகங்களையும் கொண்டுவர வேண்டாம்; அதனால், ஒருவருக்கும் எந்த நன்மையும் இல்லை.Mar 721.4

    நம் இரட்சிப்பிற்குத் தேவையான எந்த சத்தியத்தையும் கிறிஸ்து மறைத்துவைக்கவில்லை. வெளிப்படுத்தப்பட்டவைகள், நமக்கு நம் பிள்ளைகளுக்கும் உரியது. வெளிப்படுத்தப்படாதவைகள்பற்றி நம் சொந்த கருத்துக்களையும், கோட்பாடுகளையும் உருவாக்கத்தக்கதாக நமது கற்பனாசக்த்தியை நாம் அனுமதிக்கக்கூடாது.Mar 721.5

    ஆவிக்குரிய கட்டுக்கதைகள் அநேகரை சிறைபிடித்து வைத்திருக்கிறது என்ற காரியம் எனக்கு காட்டப்பட்டது... இத்தகைய பரிசுத்தமற்ற தற்புனைவுகளில் திளைக்கும் அனைவருக்கும் நான் சொல்லவேண்டுவது: “போதும் நிறுத்துங்கள், கிறிஸ்துவிற்காக, நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே நிறுத்துங்கள். நீங்கள் இருப்பது தடைசெய்யப்பட்ட இடத்தில் என்பதை உணருங்கள்” என்பதே.Mar 722.1

    நாம் எதிர்கால வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க தேவன் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவைத்திருக்கிறார். இத்தகைய திட்டங்கள் குறித்து அவர் எந்தவிதமான வெளிப்பாடுகளையும் கொடுக்கவில்லை; எனவே நாம் அவைகளைக்குறித்து யூகிக்க வேண்டாம். இவ்வுலகின் நடைமுறைகளைக்கொண்டு, அதிர்கால நித்திய வாழ்வின் நடைமுறைகளையும் நாம் அளந்துகொண்டிருக்கவேண்டாம்.⋆Mar 722.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 722.3

    “அவர் ஒளியிலிருக்கிறதுபோல னாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.” - 1 யோவான் 1:7.Mar 722.4