Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-19

    கிறிஸ்துவர்கள் தெய்வப் பிரதிநிதிகள்

    தேவன் தமது இராஜ்ஜியத்தின் இலட்சியங்களை தமது ஜனங்களின் மூலம் காட்ட வேண்டும் என்பது தெய்வ நோக்கம். அவர்கள் தங்கள் ஜீவியத்திலும், குணத்திலும் இந்த இலட்சியங்களைக் காண்பிக்கும் படியாக அவர் அவர்களை உலக போக்குகள், பழக்க வழக்கங்களிலிருந்து பிரித்து விட விரும்புகிறார். தமது சித்தத்தை அவர்களுக்கு அறிவிக்கத்தக்கதாக அவர்களைத் தம்மண்டை சேர்த்துக் கொள்ள வழி பார்க்கிறார்.CCh 264.1

    தேவன், ஆதி இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கொண்டு வந்து, அவர்கள் மூலமாக நிறைவேற்ற விரும்பிய அதே நோக்கத்தை, இன்று தமது ஜனங்களின் மூலமாக நிறைவேற்ற விரும்புகிறார்.CCh 264.2

    சபையின் மூலமாக தேவன் வெளிப்படுத்தி யிருக்கிற அவரது அன்பு, நீதி, இரக்கம், நன்மை இவைகளைப் பார்த்து, உலகம் தேவனின் பண்புகளைக் காண வேண்டும். தேவனுடைய பிரமாணம் இவ்விதமாக ஜீவியத்தில் காணப்படும் பொழுது, தேவனை சினேகித்து, அவருக்குப் பயந்து, அவரைச் சேவிக்கிறவர்கள் உலகத்தில் இருக்கிற மற்றவர்களை விட மேலானவர்கள் என்பதை உலகம் தானும் அறிந்து கொள்ளும்.CCh 264.3

    தமது ஜனத்தின் ஒவ்வொருவர் மேலும் தேவன் கண்ணேக்கமாயிருக்கிறார். ஒவ்வொருவருக்காகவும் அவர் திட்டம் வகுத்துள்ளார். தமது பரிசுத்த கட்டளைகளைக்கைக் கொள்ளுகிறவர்கள் ஒரு பிரத்தியேகமான ஜனமாக இருக்க வேண்டுமென்பது அவரது நோக்கம், மோசே தீர்க்கதரிசன ஆவியால் எழுதிய வார்த்தைகள் பூர்வ இஸ்ரவேலருக்குரியவை போன்று இன்று தேவனுடைய ஜனங்களுக்கும் அவை உரியவை. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெர்ந்து கொண்டார். உபா. 7:6. 6T. 9,12.CCh 264.4