Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிக்குரிய ஜீவியத்திற்கு எழுப்புதல் அவசியம்

    கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டும் என்று நமது ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற போதனை எனக்குக் கொடுக்கப்பட்டது. எல்லாவற்றிலும் அவரே நம் முன்மாதிரி என்பதை மறக்க வேண்டாம். நித்திய சத்திய மேடையில் தங்கள் பாதங்கள் நிற்பதின் நிச்சயமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று நமது சுவிசேஷ ஊழியர்களிடம் நான் கெஞ்சுகிறேன். உள்ளத்தில் தூண்டப்படுவதைப் பின்பற்றுவது குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அதைப் பரிசுத்த ஆவி என அழைக்க வேண்டாம். சிலர் இந்த ஆபத்திற்குட்படுகிறவர்களாக இருக்கின்றனர். அவர்கள் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகத் தங்களிலுள்ள நம்பிக்கை குறித்துக் கேட்கிறவர்களுக்குக் காரணம் சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்கிறேன்.CCh 688.2

    இந்தக் கடைசி நாட்களில் நிற்கும்படியாக ஒரு ஜனத்தை ஆயத்தப்படுத்தும் வேலையினின்று நம் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட சத்துரு வகை பார்க்கிறான். இந்த மணி நேரத்தில் நேரிடப்போகும் விபத்துகளையும் செய்ய வேண்டிய வேலையையும் விட்டு அவர்கள் மனதைத் திருப்ப அவன் தத்துவக் கலையை ஏற்படுத்தியுள்ளான். கிறிஸ்துவானவர் பரலோகம் விட்டு யோவானுக்குத் தமது ஜனத்திற்கான வெளிச்சத்தைக் கொடுத்ததை அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. நமக்கு முன் கடந்து செல்லும் காட்சிகள் நமது கவனத்தைக் கவருவதற்கு அவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தவையல்ல எனப் போதிக்கிறார்கள். பரலோகத்திலிருந்து பெற்ற சத்தியத்தை பயனற்றதாக்கி விடுகிறார்கள். தேவனுடைய ஜனங்களின் கடந்த கால அனுபவங்களைப் பறித்து அந்த இடத்திலே பொய்யான விஞ்ஞானத்தைப் புகுத்துகின்றனர்.CCh 689.1

    “வழிகளிலே நின்று பூர்வ பாதைகள் எவை என்று கேட்டு விசாரித்து நல்ல வழி எங்கே என்று பார்த்து அதிலே நடவுங்கள்” எரே 6: 16.CCh 689.2

    கடந்த காலங்களில் கொடுத்த நேரடியான சாட்சிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் அழைக் கிறார் ஆவிக்குரிய ஜீவியம் புதுப்பிக்கப்பட அவர் அழைக்கிறார். தமது மக்களின் ஆவிக்குரிய சக்திகள் நீண்ட காலமாக மந்தப்பட்டுக் கிடக்கின்றன. வெளிப்படையாகத் தோன்றும் ஆவிக்குரிய மரணத்தினின்று அவர்கள் உயிரடைய வேண்டும்.CCh 689.3

    ஜெபத்தினாலும், பாவ அறிக்கை செய்வதினாலும் ராஜபாதை ஆயத்தமாக்கப்பட வேண்டும். இதை நாம் செய்யும்போது ஆவியானவர் நம்மண்டை வருவார். பெந்தேகோஸ்தேயின் சக்தி நமக்கு அவசியம். எல்லாவற்றையும் ஜெயிக்கும் வல்லமை பொருந்திய தமது ஆவியானவரை அனுப்புவதாக கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆகையால் அவர் வருவார்.CCh 690.1

    கொடிய காலங்கள் நமக்கு முன் இருக்கின்றன. சத்திய அறிவையுடைய ஒவ்வொருவனும் எழும்பி தன்னையும், தனது சரீரம், ஆத்துமா ஆவியை தேவனுடைய சீர்திருத்தத்திற்குக் கீழ்ப்படுத்த வேண்டும். நமது வழியில் சத்துரு இருக்கிறான். அவனுக்கு விரோதமாக நாம் விழிப்புள்ளவர்களாகவும், ஜாக்கிரதையுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்திருத்தல் வேண்டும். சாட்சியாகமத்தின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். இக் காலத்திற்குரிய சத்தியத்தை நாம் நேசித்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். பலத்த வஞ்சகத்தை நாம் அங்கீகரிப்பதினின்று இது நம்மைக் காப்பாற்றும். தேவன் தமது வசனத்தின் மூலம் பேசி வருகிறார். சபைக்கென கொடுத்துள்ள சாட்சியாகமத்தின் மூலம் அவர் நம்மிடம் பேசுகிறார். இந்தப் புத்தகங்கள் நமது தற்கால கடமைகளைத் தெளிவு படுத்தி நாம் கொண்டிருக்க வேண்டிய நிலையை விளக்கி உதவி செய்கின்றன. கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிப்புகள், கற்பனையின் மேல் கற்பனையும், வாக்கியத்தின் மேல் வாக்கியமுமாக கொடுக்கப் பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இவைகளை நாம் அலட்சியம் செய்தால் எவ்வாறு தப்பித்துக்கொள்வோம்?CCh 690.2

    தேவனுக்காகத் தொண்டு புரிகிறவர்கள் உண்மைக்குப் பதில் பொய்யை ஒப்புக்கொள்ளக்கூடாது என அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். தெய்வீக பரிசுத்த சத்தியம் இருக்கும் இடத்தில் மானிட நியாயங்கள் வைக்கப்படலாகாது. தமது ஜனங்களின் இருதயங்களில் விசுவாசத்தையும், அன்பையும் தூண்டி விட கிறிஸ்து காத்துக்கொண்டிருக்கிறார். நித்திய சத்திய மேடையில் ஸ்திரமாக நிற்க வேண்டிய ஜனத்தின் மத்தியில் தப்பறையான கோட்பாடுகள் காணப்படாதிருக்கட்டும். தட்டிக் கேட்கக் கூடாத அதிகாரத்தின் பேரில் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை இலட்சியங்களை உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கும்படி தேவன் கேட்கிறார். 8T 296-298.CCh 691.1