Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்-22

    நீங்கள் உலகத்தாரல்ல

    நாம் ஒரு ஜனமாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாகாமல், உலகத்தோடு சேர்ந்து கொள்ளுகிறதான ஆபத்துக்குள்ளிருக்கிறோம் என எனக்குக் காண்பிக்கப்பட்டது. நித்திய உலகத்தின் கரையில் நாம் இப்பொழுது இருக்கின்றோம். ஆனால் உலகத்தின் முடிவு வெகு தூரத்திலிருக்கிறது என்று நாம் கடத்திவைக்கச் செய்வது ஆத்தும விரோதியின் நோக்கமாயிருக்கின்றது. வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்களில் இரண்டாந்தரம் தரிசனமாகப் போகும் நமது இரட்சகருக்காகக் காத்திருந்து கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறோம் எனச் சொல்லுகிற தேவனுஐய ஜனங்கள் எந்த வகையிலும் சாத்தான் தாக்குவான். உலகப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி அந்த ஆவிக்கு ஒப்பாகும்படி, கூடுமானவரை அந்த தீய நாளை கடத்திவைக்கும்படி அனேகரை அவன் வழி நடத்துவான்.CCh 300.1

    சத்தியத்தைக் கைக்கொள்ளுகிறோம் என்று மேன்மை பாராட்டுகிற அனேகருடைய இருதயங்களும் மனசும் உலக ஆசாபாசத்தால் ஆளப்பட்டு வருகிறதென்று கண்டபோது, நான் திகிலடைந்தேன், அனேகரால் சுயநலமும் சுயபோக்கும் பேணப்பட்டு, மெய்த்தேவ பக்தியும் உத்தம் நேர்மையும் அப்பியாசிக்கப்படவில்லை. 4T. 306.CCh 300.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents