Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    விவாக சிந்தனையுடையோருக்கு எச்சரிப்பு

    வாலிபர் உணர்ச்சி வேகத்தை அளவு கடந்து முற்றிலும் நம்புகிறார்கள். அவர்கள் மிகவும் எளிதாய் தங்களை மறந்து, காதலரது கவர்ச்சியுள்ள வெளித்தோற்றத்தினால் உடனே மயங்கிவிடுகின்றனர். காதலுறவு இந்தப் பருவத்தில் நடைபெறுகின்ற வண்ணம், வஞ்சகத்திற்கும் மாய மாலத்திற்கும் சத்துரு வகுத்த திட்டமேயாம். அதன் உதவியினால் ஆத்துமாக்களின் பகைஞன் கடவுளைக் காட்டிலும் மிகுதியாய்ச் செயல் புரியக் கூடியவனாய் இருக்கின்றான். எங்கேயாவது நல்ல பகுத்தறிவு தேவை என்றால், அது இங்கே தான். ஆயினும் உண்மை என்னவென்றால், இந்தக் காரியத்தைல் அது செய்யகி கூடியது சிறிதளவெயாம்.CCh 356.1

    மனோ ராஜ்யமும், காதல் நோயும், உணர்ச்சிமேலிடும், குஷ்டரோகத்தைப் போல் விலக்கப்பட வேண்டியவை. வாலிபரான ஆடவரும் மகளீரும் மிகப் பலர் உலகின் இவ்யுகத்தில் நற் குணம் குறைந்தவர். ஆகவே மிகவும் விழிப்பு வேண்டும். நற்குண நற்செயல் பாதுகாத்துக் கொண்டவர்கள் விரும்பத்தக்க வேறு குணங்களில் குறைவுரை யவர்களாய் இருந்தாலும் மெய்யான நல்லொழுகத்தினால் மதிப்பு உடையவர்கள்.CCh 356.2

    இவ்வகை இழிவான உணர்ச்சிவெறி உலகில் இவ் யுகத்திலுள்ள வாலிபரது சமயநெறி அனுபவத்துடன் கலந்துள்ளது. என் சகோதரியே, நீ மறுரூபம் அடைய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். உன் ஆசாபாசங்கள் உயர் நிலை அடைய வேண்டுமென்று நான் உன்னை வேண்டிக் கொள்ளுகிறேன். உன் மனவலிமை உடல் வலிமைகளை உனக்கு கிரயம் செலுத்தி மீட்ட உன் மீட்பருடைய சேவைக்கு ஒப்புக்கொடு. உன் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்குள் செய்யும்படி உன் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் தூய்மைபடுத்து.CCh 356.3

    காதலுறவில் இரவில் நெடுநேரம் போக்குகிறவர்கள் பக்கத்தில் சாத்தானுடைய தூதர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். காதலர் கண் திறந்திருந்தால், தேவதூதர் ஒருவர் தம் சொற்களையும் செயல்களையும் பதிவு செய்து கொண்டிருக்கக் காண்பர். உடல் நல விதிகளையும் அடக்கவொடுக்க முறைகளையும் மீறி நடக்கிறார்கள். மணத்திற்கு முன்னே காதலுறவு செய்யும் சில மணி நேரத்தை மண வாழ்க்கையில் செலவிடும்படி வைத்துக் கொண்டால் மிகவும் பொருத்தமாயிருக்கும் -- ஆயுனும் பொதுவாகக் காதலுறவு நாட்களில் காண்பிக்கும் பற்றுறுதி எல்லாம் மணவினையுடன் முடிந்து விடுகின்றன.CCh 357.1

    எவ்வகைச் சூழ்நிலையை எளிதாகக் கையாள்வது என்று சாத்தான் நன்கறிவான். பலவகை உபயாங்களினால் ஆத்துமாக்களை அழிவிற்கு கொண்டு போகிறதற்குப் பொறிவைக்கும் செயலில் அவன் தன் கொடிய நரக ஞானத்தைக் காண்பிக்கிறான். அவர்கள் நடைமுறை ஒவ்வொன்றையும் கவனித்துப்பார்த்துக் குறிப்பாகப் பலவகை ஆலோசனை சொல்லுகிறான். அவர்கள் தேவ வசன ஆலோசனைகளைக் காட்டிலும் பெரும்பாலும் அவனுடைய ஆலோசனைகளையே பின்பற்றுகிறார்கள். இளைஞரையும் விழிப்பில்லாத பேதைகளையும் அகப்படுத்துகிறதற்கு அவன் இவ்வளவு நேர்த்தியாக பின்னிய அபாயமுள்ள வலையை மிகவும் திறமையாக ஆயத்தப்படுத்துகிறான். அவ்வலையைப் பெரும்பாலும் மாறு கோலப்படுத்தி ஒளியினால் போர்த்து வைக்கின்றான். அதற்கு இரையானவர்களோ அனேக வேதனைகளினாலே தங்களை உருவக் குத்திக் கொண்டு துடிக்கின்றார்கள். அதன் பயனாய் எவ்விடத்திலும் மக்கள் சிதைந்து சீரழிந்து கிடக்கக் காண்கின்றோம்.CCh 357.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents